ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அப்பகுதிக்கு வருகைதந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர். மேலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இதமான கால நிலையை அனுபவித்து வருகின்றனர்.