பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு ஆபத்தான நிலையில் அதனை கடக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் விவசாயிகள் குறித்தும், அவர்களின் கோரிக்கை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எலமனூர் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களும், 750 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களும் உள்ளன. காவிரி கரையோர பகுதி என்பதால் வாய்க்கால் பாசனமே விவசாயத்திற்கு முக்கிய பங்காக அமைந்திருக்கிறது. விவசாய தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கும் இப்பகுதியில் வாழை, நெல், பூக்கள் சாகுபடி அதிகளவில் உள்ளன. காவிரி ஆற்றில் இருந்து செல்லும் கிளை வாய்க்காலான கொடிங்கால் வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படாத நிலையில், அதன் குறுக்கே பாலமும் கட்டப்படாத காரணத்தினால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொடிங்கால் வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாத காரணத்தினால் வாய்க்காலுக்கு எதிர்புறம் உள்ள சுமார் 150க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. நெல் மூட்டைகளையும், உரங்களையும் வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு அதில் ஆபத்தான முறையில் வாய்க்காலை கடக்கும் சூழலுக்கு விவசாயத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆபத்தான சூழலை பார்த்து வெளியூர்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள் கூட வேலைக்கு வர மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆண்களின் துணையின்றி பெண்களால் இந்த வாய்க்காலை கடக்க முடியாத சூழலும் நிலவுகிறது. பஞ்சாயத்து தலைவர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருக்கும் கொடிங்கால் வாய்க்காலை தூர்வாருவதோடு, அந்த வாய்க்காலின் குறுக்கே நிரந்தரமான பாலம் கட்டித்தருவதுமே அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு ஏற்படுத்தித் தரும் பாதுகாப்பாக இருக்கும்.

Tags: Poor farmers! : Woe to crossing the river with a single palm tree!
ShareTweetSendShare
Previous Post

பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! – விவசாயிகள் வேதனை!

Next Post

சித்துவிற்கு மருத்துவர்கள் கண்டனம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies