சித்துவிற்கு மருத்துவர்கள் கண்டனம்!
Sep 12, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சித்துவிற்கு மருத்துவர்கள் கண்டனம்!

மூலிகை உணவால் கேன்சரிலிருந்து மனைவி குணமடைந்ததாக வீடியோ!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 04:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த தனது மனைவி, கடுமையான உணவு கட்டுப்பாடுகள் மூலம், 40 நாட்களில் பூரண குணமடைந்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசிய வீடியோ, வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவ்ஜோத் சித்துவின் மனைவி, என்ன சாப்பிட்டு புற்றுநோயில் இருந்து மீண்டார் ? சித்துவின் கருத்துக்கு புற்றுநோய் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயின் தாக்கம், 4-ஆவது நிலையில் இருந்த நிலையில், எப்படி பூரண குணமடைந்தார் என்பது குறித்து நவ்ஜோத் சித்து பேசியிருந்தார். சித்து பேசிய வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது மனைவிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டதாகவும், நோயின் தீவிரம் 4ஆவது நிலையில் இருந்தாகவும் உயிர் பிழைக்க 3 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக சித்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவராக இருக்கும் தனது நண்பரின் மகனிடம் சிகிச்சைக்குச் சென்றதாகவும், அவரும் கவுர் சித்து உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறியதாகவும் சித்து பேசி இருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம், மூன்றரை மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில், மருத்துவச் சிகிச்சைகளை விட்டுவிட்டு உணவு மூலம் புற்றுநோயைக் குணப் படுத்த முடிவு செய்ததாக சித்து அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

தனது மனைவி, தினமும் எலுமிச்சைச் சாறு, பச்சை மஞ்சள், ஆப்பிள் வினிகர், வேப்ப மற்றும் துளசி இலைகள், பூசணி, மாதுளை, நெல்லிக்காய், பீட்ரூட் மற்றும் அக்ரூட் என கண்டிப்பான உணவுகளை எடுத்துக் கொண்டதாக சித்து கூறியிருந்தார்.

மேலும், அதிகாலையில் எழுந்தவுடன் இலவங்கப்பட்டை, கிராம்பு, வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை உள்ளடக்கிய மசாலா தேநீர் குடித்ததாகவும், சர்க்கரை, மாவுச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்து விட்டதாகவும் சித்து வீடியோவில் கூறியிருந்தார்.

இவ்வாறு 40 நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டதால், தனது மனைவி புற்று நோயிலிருந்து பூரண குணமடைந்தாக தெரிவித்த சித்துவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

குறிப்பாக, டாடா மெமோரியல் மருத்துவமனை, 262 புற்றுநோய் மருத்துவர்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உணவு பழக்க வழக்கங்கள் மூலம் புற்றுநோயில் இருந்து தனது மனைவி குணமடைந்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்து ஆதாரமற்றது மற்றும் இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதது என்றும் கூறியுள்ள மருத்துவர்கள், சித்து அடிப்படையில்லாத மருத்துவ பரிந்துரை செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற ஆதாரமற்ற முறைகளை நம்பி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொள்ள தாமதிக்க வேண்டாம் என்றும், புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உடனடியாக, புற்றுநோய் மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டாடா மெமோரியல் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு நோயாளிக்கும் நோய் நிலை, உடல் அமைப்பு, உடல் மற்றும் மன வலிமை வேறுபடுவதால், ஆபரேசன், ரேடியேசன் தெரபி, கீமோதெரபி மூலம் மட்டுமே பூரண குணமடைய முடியும் என்று புற்று நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூடவே, இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்பி உடல்நலத்தை மேலும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Doctors condemn Sidhu! From cancer with herbal diet Video of recovery of wife
Share
Tweet
SendShare
Previous Post

பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!

Next Post

புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies