பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!
Jul 31, 2026, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு ஆபத்தான நிலையில் அதனை கடக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் விவசாயிகள் குறித்தும், அவர்களின் கோரிக்கை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எலமனூர் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களும், 750 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களும் உள்ளன. காவிரி கரையோர பகுதி என்பதால் வாய்க்கால் பாசனமே விவசாயத்திற்கு முக்கிய பங்காக அமைந்திருக்கிறது. விவசாய தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கும் இப்பகுதியில் வாழை, நெல், பூக்கள் சாகுபடி அதிகளவில் உள்ளன. காவிரி ஆற்றில் இருந்து செல்லும் கிளை வாய்க்காலான கொடிங்கால் வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படாத நிலையில், அதன் குறுக்கே பாலமும் கட்டப்படாத காரணத்தினால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொடிங்கால் வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாத காரணத்தினால் வாய்க்காலுக்கு எதிர்புறம் உள்ள சுமார் 150க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. நெல் மூட்டைகளையும், உரங்களையும் வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு அதில் ஆபத்தான முறையில் வாய்க்காலை கடக்கும் சூழலுக்கு விவசாயத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆபத்தான சூழலை பார்த்து வெளியூர்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள் கூட வேலைக்கு வர மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆண்களின் துணையின்றி பெண்களால் இந்த வாய்க்காலை கடக்க முடியாத சூழலும் நிலவுகிறது. பஞ்சாயத்து தலைவர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருக்கும் கொடிங்கால் வாய்க்காலை தூர்வாருவதோடு, அந்த வாய்க்காலின் குறுக்கே நிரந்தரமான பாலம் கட்டித்தருவதுமே அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு ஏற்படுத்தித் தரும் பாதுகாப்பாக இருக்கும்.

Tags: Poor farmers! : Woe to crossing the river with a single palm tree!
ShareTweetSendShare
Previous Post

பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! – விவசாயிகள் வேதனை!

Next Post

சித்துவிற்கு மருத்துவர்கள் கண்டனம்!

Related News

இனறைய தங்கம் விலை!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies