நவீன கால சித்தார்த்தன் : துறவறம் பூண்ட மலேசிய கோடீஸ்வரரின் மகன் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவீன கால சித்தார்த்தன் : துறவறம் பூண்ட மலேசிய கோடீஸ்வரரின் மகன் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் அபரிமிதமான செல்வத்தை பொருட்படுத்தாமல், அனைத்து சொத்துக்களையும்  விட்டுவிட்டு, புத்த துறவியாகி உள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

THE MONK WHO SOLD HIS FERRARI “தி மாங்க் ஹூ சோல்டு ஹிஸ் ஃபெராரி ” என்ற நாவலைப் புகழ் பெற்ற எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதியிருந்தார். அந்த நாவலில், ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரான ஜூலியன் மேன்டில், தனது உல்லாச மாளிகையையும் ஃபெராரியையும் விற்று விட்டு, இமய மலையில் ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வார்.

முற்றிலும் கற்பனையான இந்த நாவலை நிஜமாக்கி இருக்கிறார் அஜான் சிரிபான்யோ. நிஜ வாழ்க்கையில் பில்லியன் கணக்கான மதிப்புடைய தனது மொத்த செல்வத்தையும் துறந்துவிட்டு 18 வயதில் புத்த துறவி ஆகி இருக்கிறார்.

ஏகே என்றும் பரவலாக அறியப்படும் அனந்த கிருஷ்ணன், மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். இந்த ஆண்டு ,ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, ஏகே சொத்து மதிப்பு 45,339 கோடி ரூபாய் ஆகும். தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள்கள், ஊடகங்கள், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஏகேயின் வணிகப் பேரரசு பரவியுள்ளது.

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தலைமையிலான புகழ்பெற்ற ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஸ்பான்சரான ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராகவும் ஏகே இருந்தார். விதிவிலக்கான தன் வணிக புத்திசாலித்தனத்தால் அனந்த கிருஷ்ணனின் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்தின் வழித்தோன்றலான மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபனை திருமணம் செய்த ஏகேவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். புத்த மதத்தைப் பின்பற்றிவரும் ஏகேவின் ஒரே மகன் அஜான் சிரிபான்யோ ஒரு தேரவாத புத்த துறவி ஆகியுள்ளார்.

தனது இரண்டு சகோதரிகளுடன் லண்டனில் வளர்ந்து, இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்த அஜான் சிரிபான்யோ ஆங்கிலம், தமிழ் மற்றும் தாய் மொழி உட்பட எட்டு மொழிகளில் சரளமாகப் பேசும் திறமைகொண்டவர் என்று கூறப்படுகிறது.

தாய் வழி உறவுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அஜான் சிரிபான்யோ, சிறுவயது முதலே புத்த மத நம்பிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததாக தெரியவருகிறது. இதுவே அஜான் சிரிபான்யோவை நிரந்தர துறவு வாழ்ககைக்கு கொண்டு வந்திருக்கிறது.

அஜான் சிரிபான்யோ துறவி ஆவதற்கான காரணங்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, என்றாலும் 50,000 கோடிக்கும் மேலான வணிக பேரரசை விட்டு விட்டு எளிமையான துறவு வாழ்க்கையைத் தழுவியது ஆச்சரியமாக பார்க்கப் படுகிறது.

இப்போது,தாய்லாந்து-மியான்மர் எல்லையில் அமைந்துள்ள ( Dtao Dum )தாவோ டம் மடாலயத்தில் அஜான் சிரிபான்யோ துறவியாக இருக்கிறார். குடும்ப பாசம் என்பது புத்தமதத்தின் கட்டளைகளில் ஒன்றாகும். எனவே, அஜான் சிரிபான்யோ தனது தந்தையை அவ்வப்போது பார்க்க நேரம் ஒதுக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம் கொழித்து கிடக்கும் தனது சாம்ராஜ்ஜியத்தின் ஒரே ஆண் வாரிசு துறவறத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது, புத்தமத்தை பின்பற்றும் ஏகே.,வுக்கு விலைமதிப்பற்ற கடவுளின் பரிசாகும்.

Tags: Malaysia's third richest manAnanda KrishnanBuddhist monkchennai super kingsAjahn Siripanyo
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை எதிரொலி – சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை குறைவு!

Next Post

இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற எதிர்ப்பு – தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies