நவீன கால சித்தார்த்தன் : துறவறம் பூண்ட மலேசிய கோடீஸ்வரரின் மகன் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவீன கால சித்தார்த்தன் : துறவறம் பூண்ட மலேசிய கோடீஸ்வரரின் மகன் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் அபரிமிதமான செல்வத்தை பொருட்படுத்தாமல், அனைத்து சொத்துக்களையும்  விட்டுவிட்டு, புத்த துறவியாகி உள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

THE MONK WHO SOLD HIS FERRARI “தி மாங்க் ஹூ சோல்டு ஹிஸ் ஃபெராரி ” என்ற நாவலைப் புகழ் பெற்ற எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதியிருந்தார். அந்த நாவலில், ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரான ஜூலியன் மேன்டில், தனது உல்லாச மாளிகையையும் ஃபெராரியையும் விற்று விட்டு, இமய மலையில் ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வார்.

முற்றிலும் கற்பனையான இந்த நாவலை நிஜமாக்கி இருக்கிறார் அஜான் சிரிபான்யோ. நிஜ வாழ்க்கையில் பில்லியன் கணக்கான மதிப்புடைய தனது மொத்த செல்வத்தையும் துறந்துவிட்டு 18 வயதில் புத்த துறவி ஆகி இருக்கிறார்.

ஏகே என்றும் பரவலாக அறியப்படும் அனந்த கிருஷ்ணன், மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். இந்த ஆண்டு ,ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, ஏகே சொத்து மதிப்பு 45,339 கோடி ரூபாய் ஆகும். தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள்கள், ஊடகங்கள், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஏகேயின் வணிகப் பேரரசு பரவியுள்ளது.

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தலைமையிலான புகழ்பெற்ற ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஸ்பான்சரான ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராகவும் ஏகே இருந்தார். விதிவிலக்கான தன் வணிக புத்திசாலித்தனத்தால் அனந்த கிருஷ்ணனின் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்தின் வழித்தோன்றலான மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபனை திருமணம் செய்த ஏகேவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். புத்த மதத்தைப் பின்பற்றிவரும் ஏகேவின் ஒரே மகன் அஜான் சிரிபான்யோ ஒரு தேரவாத புத்த துறவி ஆகியுள்ளார்.

தனது இரண்டு சகோதரிகளுடன் லண்டனில் வளர்ந்து, இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்த அஜான் சிரிபான்யோ ஆங்கிலம், தமிழ் மற்றும் தாய் மொழி உட்பட எட்டு மொழிகளில் சரளமாகப் பேசும் திறமைகொண்டவர் என்று கூறப்படுகிறது.

தாய் வழி உறவுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அஜான் சிரிபான்யோ, சிறுவயது முதலே புத்த மத நம்பிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததாக தெரியவருகிறது. இதுவே அஜான் சிரிபான்யோவை நிரந்தர துறவு வாழ்ககைக்கு கொண்டு வந்திருக்கிறது.

அஜான் சிரிபான்யோ துறவி ஆவதற்கான காரணங்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, என்றாலும் 50,000 கோடிக்கும் மேலான வணிக பேரரசை விட்டு விட்டு எளிமையான துறவு வாழ்க்கையைத் தழுவியது ஆச்சரியமாக பார்க்கப் படுகிறது.

இப்போது,தாய்லாந்து-மியான்மர் எல்லையில் அமைந்துள்ள ( Dtao Dum )தாவோ டம் மடாலயத்தில் அஜான் சிரிபான்யோ துறவியாக இருக்கிறார். குடும்ப பாசம் என்பது புத்தமதத்தின் கட்டளைகளில் ஒன்றாகும். எனவே, அஜான் சிரிபான்யோ தனது தந்தையை அவ்வப்போது பார்க்க நேரம் ஒதுக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம் கொழித்து கிடக்கும் தனது சாம்ராஜ்ஜியத்தின் ஒரே ஆண் வாரிசு துறவறத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது, புத்தமத்தை பின்பற்றும் ஏகே.,வுக்கு விலைமதிப்பற்ற கடவுளின் பரிசாகும்.

Tags: Buddhist monkchennai super kingsAjahn SiripanyoMalaysia's third richest manAnanda Krishnan
Share
Tweet
SendShare
Previous Post

தொடர் மழை எதிரொலி – சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை குறைவு!

Next Post

இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற எதிர்ப்பு – தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies