ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா தனது வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரயில்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவும், ரஷ்யாவும் 70 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல், தொழில்துறை சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ரஷ்யா இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன.

காமன் வெல்த் ஆப் இண்டிபெண்டெண்ட் ஸ்டேட்ஸ் எனப்படும் (CIS) சிஐஎஸ் பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவுள்ள நாடாக ரஷ்யா உள்ளது. உலகளவில் இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் 5வது பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியாவில் அந்நிய முதலீடுகளில் ரஷ்யா 29 வது இடத்தில உள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர இரு தரப்பு உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய- ரஷ்ய உறவு வலிமை பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவும் ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தக இலக்கை 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இருதரப்பு முதலீட்டு இலக்கை 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் நிர்ணயித்துள்ளன.

2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரு தரப்பு வர்த்தகம் இது வரை இல்லாத அளவில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து 36 மாதங்களுக்கும் மேலான நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. குறைந்த விலைக்கு ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது .

இந்த சூழலில், நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ரயில் மற்றும் உதிரிபாக உற்பத்தியில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய மூன்று காரணங்களை ரஷ்ய நிறுவனமான டி.எம்.ஹெச் (TMH) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் லிபா தெரிவித்திருக்கிறார்.

மற்ற நாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவின் வட்டி விகிதம் பொருத்தமானதாக இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்யவும் தயாராகஇருப்பதாக தெரிவித்த லிபா, ஏற்கெனவே இந்தியாவுடன் பல விநியோக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ரஷ்யா மீதான பொருளாதார தடை எந்த வகையிலும், இந்தியாவுடன் வர்த்தக உறவை பாதிக்காது என்றும் லிபா தெளிவு படுத்தி இருக்கிறார்.

ஏற்கெனவே, 1,920 வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளைத் தயாரிப்பதற்கும், அவற்றை 35 ஆண்டுகள் பராமரிப்பதற்கும் 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் கைனெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்த கைனெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் டி.எம்.ஹெச் (TMH) ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத் தக்கது.

ரஷ்யாவிற்கு பெரிய உள்நாட்டு தேவைகள் உள்ளன அதற்காக இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க விரும்புகிறது. இது இந்தியாவுக்கு லாபம் தான் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Tags: Commonwealth of Independent Statesforeign investment in India.Indiarussiamanufacture trains
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

தொடர் மழை எதிரொலி – சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை குறைவு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies