இட ஒதுக்கீடு பெற மதம் மாறுவது மோசடி : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இட ஒதுக்கீடு பெற மதம் மாறுவது மோசடி : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே மதம் மாறுவதை, இந்திய அரசியலமைப்பின் மீதான மோசடி என்று கூறிய உச்ச நீதிமன்றம், மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் சாதி ஏற்றத்தாழ்வுகளினால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சட்டமாகும். அதாவது, ‘இந்து’ என்ற அமைப்பில் வாழ்ந்து வரும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே இந்த சட்டம்.

இந்த அடிப்படையில் தான் இடஒதுக்கீடானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்திய அரசியலமைப்பின் பட்டியலின சாதிகள் திருத்த ஆணை 1950 ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது.

யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்ஸி இல்லையோ அவரை ‘இந்து’ என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். அதன்படி மத ரீதியாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்வோருக்கு இட ஒதுக்கீடு என்பது பொருந்தாது என்பதே சட்டம்.

1950-களிலேயே கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதற்கு , குடியரசுத் தலைவர் ஆணை வரவில்லை.

ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து உள் இடஒதுக்கீடாக மத அடிப்படையில் இட ஒதுக்கீடு சில அரசுகளால் வழங்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட இந்துகள். நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம், மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, அவை சட்ட விரோதமானது என்று பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. அதையே தான் இப்போது உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக ஆணை பிறப்பித்துள்ளது. எந்த வழக்கில் என்ன தீர்ப்பு என்பதை பார்க்கலாம் .

புதுச்சேரி அரசுப் பணியில் மேல் பிரிவு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர் தனது தந்தை இந்து என்றும், தாய் கிறித்தவர் என்பதால் தான், ​​ஒரு இந்து என்று கூறி தனக்கு எஸ்.சி. சாதி சான்றுதழ் வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் , மேற்கொண்ட விசாரணையில், செல்வராணியின் தந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் கிறித்தவ மதத்துக்கு மாறியது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் மறுத்துவிட்டார்.

இதனையடுத்து செல்வராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தான் சிறு வயது முதல் இந்து மதத்தை பின்பற்றுவதாகவும், இந்துமதத்துக்கு உட்பட்ட வள்ளுவன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறிருந்தார். மேலும், கிறித்தவ மதத்துக்கு மாறினாலும், பின்னர் தான் சார்ந்த இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே, தனது தந்தை, சகோதரர் ஆகியோர் எஸ்.சி சாதி சான்றிதழ் வைத்துள்ளனர் என்றும், அதனால் தனக்கும் எஸ்.சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் விண்ணப்பம் வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்வராணி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, ஞான ஸ்நானம் பெற்று, சிறு வயது முதல் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே சலுகையை பெறுவதற்கான எஸ்.சி சாதி சான்றிதழ் வேண்டுவதை ஏற்க முடியாது. என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், செல்வராணிக்கு சாதி சான்றிதழ் வழங்க முடியாது என தீர்ப்பளித்து செல்வராணியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, செல்வராணி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதி பங்கஜ் மிட்டல் மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. செல்வராணியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

மதசார்பற்ற இந்த நாட்டின் குடி மக்களுக்கு எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு முழு உரிமை இருக்கிறது என்று கூறிய நீதிபதிகள், ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக வாழும் ஒருவர் இட ஒதுக்கீட்டு சலுகைகளுக்காக தன்னை இந்துவாக அடையாளம் காட்ட முடியாது என்றும் இட ஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மதம் மாறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது என்றும், சலுகைகளைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மதம் மாறுவது என்பது அரசியல் சாசனத்தின் மீதான மோசடி என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மனுதாரரின் இரட்டை கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.சி சாதி சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே எனக்கூறி செல்வராணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இட ஒதுக்கீடு நலன்களைப் பெற மத மாற்றத்தை மேற்கொள்ளும் ஒருவரின் நோக்கம் சமூக நீதிக்கொள்கையை சிதைத்து விடும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உரக்க சொல்லி இருக்கிறது.

Tags: changing religion for reservationCastes Amendment Actsupreme courtreservation
ShareTweetSendShare
Previous Post

கடல் நீர் மட்டம் உயர்வு – தண்ணீரில் மூழ்கிய தேவிபட்டினம் நவகிரக சிலைகள்!

Next Post

IPL-ல் ரூ.1.10 கோடிக்கு ஏலம் : சிறுவன் சூர்யவன்ஷிக்கும் சேப்பாக்கத்திற்கும் என்ன தொடர்பு? – சிறப்பு தொகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies