திருவண்ணாமலை நிலச்சரிவில் 4 பேர் சடலமாக மீட்பு - மூவரை தேடும் பணி தீவிரம்!
Jul 25, 2025, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை நிலச்சரிவில் 4 பேர் சடலமாக மீட்பு – மூவரை தேடும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 09:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.

அப்போது அங்குள்ள மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 80 டன் எடைகொண்ட பாறை உருண்டு அடிவார பகுதியான வ.உ.சி நகர் 11-வது தெருவில் இருந்த இரு வீடுகள் மீது விழுந்தது. இதில் ஒரு வீட்டில் இருந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து 3-வது நாளாக அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே 3-வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டவில்லை எனவும், மீட்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீட்புப்படையினர் உயிரிழந்தவர்களின் முகத்தைக்கூட காட்ட மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

Tags: National Disaster Response ForceTiruvannamalai landslideMahadeepa Hillrocks roll down on hiouseltiruvannamalai
ShareTweetSendShare
Previous Post

ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் : உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம் – சிறப்பு கட்டுரை!

Next Post

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு : சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies