திருவண்ணாமலை நிலச்சரிவில் 4 பேர் சடலமாக மீட்பு - மூவரை தேடும் பணி தீவிரம்!
Jul 31, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை நிலச்சரிவில் 4 பேர் சடலமாக மீட்பு – மூவரை தேடும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 09:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.

அப்போது அங்குள்ள மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 80 டன் எடைகொண்ட பாறை உருண்டு அடிவார பகுதியான வ.உ.சி நகர் 11-வது தெருவில் இருந்த இரு வீடுகள் மீது விழுந்தது. இதில் ஒரு வீட்டில் இருந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து 3-வது நாளாக அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே 3-வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டவில்லை எனவும், மீட்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீட்புப்படையினர் உயிரிழந்தவர்களின் முகத்தைக்கூட காட்ட மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

Tags: rocks roll down on hiouseltiruvannamalaiNational Disaster Response ForceTiruvannamalai landslideMahadeepa Hill
ShareTweetSendShare
Previous Post

ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் : உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம் – சிறப்பு கட்டுரை!

Next Post

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு : சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies