மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யும் பிரகதி வலைதளம் - பிரதமர் மோடி
Jan 14, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யும் பிரகதி வலைதளம் – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் பிரகதி வலைதளம் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் அங்கீகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகதி வலைதள செயல்பாடு குறித்த ஆய்வை,
கேட்ஸ் அறக்கட்டளை ஆதரவுடன் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி மேற்கொண்டது.
பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த களஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதம்தோறும் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடியின் நேரடி பங்கேற்பு, பிரகதி வலைதளத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டிஜிட்டல் கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாசாரத்தை பிரகதி வலைதளம் உருவாக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு பிரகதி வலைதளம் உதவியாக அமைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க இந்த வலைதளம் உதவுவதாகவும்,
சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த உதவுவதாகவும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவு 32 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைய இந்த வலைதளம் உதவுவதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் பிரகதி வலைதளம் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரகதி வலைதளம் மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாகவும், பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: prime minister modiOxford Business School study.Central Government's Pragati website
ShareTweetSendShare
Previous Post

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Next Post

ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் எப்போது? கடற்படை தளபதி திரிபாதி விளக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies