திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
கோவில்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த ஜேசிபி இயந்திரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் 15 பேர் காயமடைந்த நிலையில், பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.