காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் - விசாரணைக்கு உத்தரவு!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் – விசாரணைக்கு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனுவின் இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை கூடியதும் தலைவர் ஜகதீப் தன்கர் பேச தொடங்கினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனு அமரும் 222-ஆவது இருக்கையிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவை பாதுகாவலர்கள் கண்டெடுத்ததாகவும், இது மிகவும் தீவிர பிரச்னை என்றும் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். அத்துடன் மாநிலங்களவையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விசாரணை நிறைவடைந்து இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ரூபாய் நோட்டு கண்டெடுக்கப்பட்ட உறுப்பினரின் பெயரையும், இருக்கை எண்ணையும் அவைத் தலைவர் தெளிவாக உச்சரித்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒட்டுமொத்த தேசமும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும்போது, நாடாளுமன்றத்துக்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருவது ஏற்புடையதுதானா என்றும் கிரண் ரிஜிஜு வினவினார்.

இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்த காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி, அந்தப் பணம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும், 500 ரூபாய் நோட்டை மட்டுமே கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அத்துடன், அவையில் வெறும் மூன்று நிமிடம் மட்டுமே தாம் இருந்ததாக கூறிய அவர், எஞ்சிய முப்பது நிமிடங்களை கேன்டீனில் செலவிட்டதாக குறிப்பிட்டார்.

Tags: Jagdeep Dhankharrajya sabhaCongress member Abhishek Singhvibundled currency notes in mp seat
ShareTweetSendShare
Previous Post

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு!

Next Post

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies