காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் - விசாரணைக்கு உத்தரவு!
Aug 3, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் – விசாரணைக்கு உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனுவின் இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை கூடியதும் தலைவர் ஜகதீப் தன்கர் பேச தொடங்கினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனு அமரும் 222-ஆவது இருக்கையிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவை பாதுகாவலர்கள் கண்டெடுத்ததாகவும், இது மிகவும் தீவிர பிரச்னை என்றும் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். அத்துடன் மாநிலங்களவையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விசாரணை நிறைவடைந்து இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ரூபாய் நோட்டு கண்டெடுக்கப்பட்ட உறுப்பினரின் பெயரையும், இருக்கை எண்ணையும் அவைத் தலைவர் தெளிவாக உச்சரித்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒட்டுமொத்த தேசமும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும்போது, நாடாளுமன்றத்துக்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருவது ஏற்புடையதுதானா என்றும் கிரண் ரிஜிஜு வினவினார்.

இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்த காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி, அந்தப் பணம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும், 500 ரூபாய் நோட்டை மட்டுமே கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அத்துடன், அவையில் வெறும் மூன்று நிமிடம் மட்டுமே தாம் இருந்ததாக கூறிய அவர், எஞ்சிய முப்பது நிமிடங்களை கேன்டீனில் செலவிட்டதாக குறிப்பிட்டார்.

Tags: Jagdeep Dhankharrajya sabhaCongress member Abhishek Singhvibundled currency notes in mp seat
ShareTweetSendShare
Previous Post

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு!

Next Post

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

Related News

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies