காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் - விசாரணைக்கு உத்தரவு!
Jul 29, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் – விசாரணைக்கு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனுவின் இருக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை கூடியதும் தலைவர் ஜகதீப் தன்கர் பேச தொடங்கினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி மனு அமரும் 222-ஆவது இருக்கையிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவை பாதுகாவலர்கள் கண்டெடுத்ததாகவும், இது மிகவும் தீவிர பிரச்னை என்றும் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். அத்துடன் மாநிலங்களவையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விசாரணை நிறைவடைந்து இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ரூபாய் நோட்டு கண்டெடுக்கப்பட்ட உறுப்பினரின் பெயரையும், இருக்கை எண்ணையும் அவைத் தலைவர் தெளிவாக உச்சரித்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒட்டுமொத்த தேசமும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும்போது, நாடாளுமன்றத்துக்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருவது ஏற்புடையதுதானா என்றும் கிரண் ரிஜிஜு வினவினார்.

இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்த காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி, அந்தப் பணம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும், 500 ரூபாய் நோட்டை மட்டுமே கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அத்துடன், அவையில் வெறும் மூன்று நிமிடம் மட்டுமே தாம் இருந்ததாக கூறிய அவர், எஞ்சிய முப்பது நிமிடங்களை கேன்டீனில் செலவிட்டதாக குறிப்பிட்டார்.

Tags: Jagdeep Dhankharrajya sabhaCongress member Abhishek Singhvibundled currency notes in mp seat
ShareTweetSendShare
Previous Post

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு!

Next Post

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies