இந்திய துறவியால் வெற்றி : Steve Jobs, Mark Zuckerberg உள்ளிட்டோரை வழி நடத்திய நீம் கரோலி பாபா - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய துறவியால் வெற்றி : Steve Jobs, Mark Zuckerberg உள்ளிட்டோரை வழி நடத்திய நீம் கரோலி பாபா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழ்வில் வெற்றி பெற உத்வேகம் ஏற்படுத்தியவர் யார் என்று கேட்டால், (Steve Jobs) ஸ்டீவ் ஜாப்ஸ், (Mark Zuckerberg) மார்க் ஸக்கர்பர்க், (Jack Dorsey) ஜேக் டார்ஸி என சர்வதேச முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், இந்தியாவை சேர்ந்த நீம் கரோலி பாபாவை கூறுகின்றனர். யார் இந்த நீம் கரோலி பாபா ? தங்கள் வெற்றிக்கு காரணமாக நீம் கரோலி பாபாவை பல பிரபலங்கள் சொல்வதன் ரகசியம் என்ன? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1900ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பிறந்த லக்ஷ்மன் நாராயணன் சர்மா தீவிர ஆஞ்சநேய பக்தராக இருந்தார். ஆன்மீக வாழ்வில் ஈடுபாடு அதிகமான காரணத்தால், 1958ம் ஆண்டு திருமண வாழ்வில் இருந்து வெளியேறி முழு துறவறம் மேற்கொண்டார்.

அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்த வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் நீம் கரோலி பாபா தொடர்ந்து கூறிவந்தார்.

உலகளாவிய அன்பே முக்கியம் என்றும், வெகுமதி எதிர்பார்க்காமல் தன்னலமற்ற முறையில் பிறருக்கு உதவுதலும் , தியானம் மேற்கொள்வதும் வாழ்வை சிறப்பானதாக்கும் என்றும் கூறிய நீம் கரோலி பாபா , இந்த மூன்றையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறிவந்தார். 1973ம் ஆண்டு காலமான நீம் கரோலி பாபாவை அவரது சீடர்கள் மகராஜ் என்றே போற்றுகின்றனர்.

1970களின் நடுப்பகுதியில் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான குழப்பத்தின் போது, ​​உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கைஞ்சியில் உள்ள நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்திற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் வந்திருக்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பே நீம் கரோலி பாபா இறந்து விட்டார். நீம் கரோலி பாபாவை , ஸ்டீவ் ஜாப்ஸால் பார்க்க முடியவில்லை.

ஆனாலும், ஆசிரமத்தின் அமைதியான சூழலை உள்வாங்கிக்கொண்டு பாபாவின் சீடர்களுடன் ஸ்டீவ் ஜாப்ஸ் பழகினார். இந்த அனுபவம் ஜாப்ஸுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்திய ஆன்மீக அனுபவம், தெளிவு மற்றும் உத்வேகத்தை அளித்தது. இதுவே ஆப்பிளின் வடிவமைப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.

நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் தான் எளிமையான மற்றும் அமைதியான சூழலில் தனக்கு தெளிவு பிறந்ததாக ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்துள்ளார்.

சவாலான காலங்களில் ஆன்மீக வழிகாட்டுதலைப் பெற மற்றவர்களையும் ஊக்குவிப்பதற்காக ஸ்டீவ் ஜாப்ஸ் பின்னர், பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட முன்னணி தொழில்நுட்ப நிறுவன அதிபர்களையும் பிற துறை சார்ந்த பிரபலங்களையும் நீம் கரோலி பாபா ஆசிரமம் பற்றி பரிந்துரை செய்துள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் பரிந்துரையால் 2015ம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க், நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்துக்கு சென்றிருக்கிறார். அந்த கால கட்டத்தில் தான், ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கின் விரைவான விரிவாக்கத்திற்காக பல்வேறு பிரச்சனைகளுடன் போராடி கொண்டிருந்தார்.

உலகத்தை இணைக்கும் ஃபேஸ்புக்கின் நோக்கம் மீதான தனது நம்பிக்கையை ஆசிரமம் தான் உண்டாக்கியது என்றும், முன்னேறுவதற்கான நம்பிக்கையையும் உறுதியையும் ஆசிரமம் தான் தமக்கு தந்தது என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் பின்னர் தெரிவித்திருந்தார்.

இதே போல் நீம் கரோலி பாபாவை தீவிரமாக பின்பற்றும் தொழிலதிபர்களில் டிவிட்டர் நிறுவனத்தை தொடங்கிய ஜேக் டார்ஸியும் ஒருவர்.

ஆசிரமத்துக்கு சென்றது குறித்து ஜேக் டார்ஸி எதுவும் எப்போதும் சொன்னதில்லை . ஆனாலும்,நீம் கரோலி பாபாவின் தாக்கம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். தினந்தோறும் தியானத்தில் ஈடுபடுவதற்கு நீம் கரோலி பாபாவே காரணம் என்று கூறும் ஜேக் டார்ஸி, தலைமை பதவியில் இருப்பதற்கு நீம் கரோலி பாபாவின் போதனைகளே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஜேக் டோர்சி போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மட்டுமல்ல, ஈபே இணை நிறுவனர் ஜெஃப்ரி ஸ்கோல், நீம் கரோலி பாபாவின் சிந்தனையால் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், நீம் கரோலி பாபா ஆசிரமத்துக்கு வந்த பின்னர் தான் இந்து மதத்தைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023ம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம் மகளுடன் நீம் கரோலி ஆசிரமத்துக்குச் சென்று, ஆசீர்வாதங்களைப் பெற்றனர். மேலும், பாபாவின் ஆன்மீக மரபில் தங்களை இணைத்து கொண்டனர்.

மன அழுத்தத்தின் போது, தெளிவாகவும் அமைதியாகவும் இருக்க ஆசிரமத்தின் ஆன்மீக மரபே தனக்கு உதவியது என்பதை பல சந்தர்ப்பங்களில் விராட் கோலி குறிப்பிட்டிருக்கிறார் .

நவீன உலகில் எந்த துறை என்றாலும் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் மட்டுமின்றி, வெற்றி பெற்ற பின் அந்த வெற்றியைத் தக்க வைத்து கொள்ளவும் போராட வேண்டியிருக்கிறது. இதில், சமநிலையான வாழ்க்கையையும் அமைதியையும் மக்கள் தேடுகின்றனர்.

இதற்கு எளிய வழியை நீம் கரோலி பாபாவின் போதனைகள் காட்டுகின்றன என்பதாலேயே, சர்வதேச பிரபலங்கள் பாபாவின் ஆன்மீக மரபை பின்பற்றுகின்றனர்.

Tags: Indiauttar pradeshmark zuckerbergSteve JobsJack DorseyNeem Karoli BabaLakshman Narayan Sharmadevotee of Anjaneya
ShareTweetSendShare
Previous Post

திருமலையில் ஜீசஸ் என பொறிக்கப்பட்ட பொருள் விற்பனை – கடைக்கு சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம்!

Next Post

10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விழுப்புரம் மாவட்ட மீனவர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies