கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ - சரவணன்!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ – சரவணன்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலும், டாக்டர்.சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக செல்லூர் ராஜூ பணியாற்றி வரும் நிலையில், மருத்துவரணியின் இணை செயலாளராக டாக்டர்.சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார். நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர்.சரவணன், 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான அதிமுக தொண்டர்கள், செல்லூர் ராஜூ தான் இதற்கு காரணம் எனவும், சரவணன் தோல்வியடைய வேண்டும் என்றே செல்லூர் ராஜூ உள்ளடி வேலை பார்த்ததாகவும் முணுமுணுத்துக் கொண்டனர். இந்த தோல்வியின் எதிரொலியாக சரவணனுக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதிமுக நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி குறைகளை சுட்டிக்காட்ட முயன்றனர். செல்லூர் ராஜூ மீது அவர்கள் புகார் கூற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள், மேடையில் ஏறிய நிர்வாகியை சரமாரியாக அடித்து கீழே தள்ளினர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவும் “அவரை அடிங்க” என மைக்கிலேயே பேசினார். மேடையில் அமர்ந்திருந்த செம்மலை, அருகில் அமர்ந்திருந்த மருத்துவர் சரவணனை கைகாட்டி இவர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறினார்.

தொடர்ந்து கள ஆய்வுக்கூட்டம் நிறைவு பெற்றவுடன் வெளியில் வந்த மருத்துவர் சரவணன், “அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம்; இதெல்லாம் சாதாரணம்” எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

மதுரை அதிமுகவை 4 மாவட்டங்களாக பிரித்து அதில் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை பெற சரவணன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், சரவணன் வளர்ந்தால் அது தனது இடத்தை கேள்விக்குறியாக்கும் என செல்லூர் ராஜூ நினைப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இருவருக்கும் இடையிலான மோதலை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களும், மருத்துவர் சரவணன் ஆதரவாளர்களும் தனித்தனியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செல்லூர் ராஜூ, சரவணனை தவிர்த்து அங்கிருந்த மற்ற அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.

செல்லூர் ராஜூ, சரவணன் இடையிலான மோதல் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என ஆதங்கம் தெரிவிக்கும் அதிமுக தொண்டர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

Tags: DMKADMKtn politicsWho is showing off? : Sellar Raju - Saravanan to fight in Madurai!
ShareTweetSendShare
Previous Post

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

Next Post

விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் சோதனை : இஸ்ரோவின் அடுத்த அசத்தல் – சிறப்பு கட்டுரை!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies