கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ - சரவணன்!
Sep 14, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ – சரவணன்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2024, 06:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலும், டாக்டர்.சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக செல்லூர் ராஜூ பணியாற்றி வரும் நிலையில், மருத்துவரணியின் இணை செயலாளராக டாக்டர்.சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார். நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர்.சரவணன், 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான அதிமுக தொண்டர்கள், செல்லூர் ராஜூ தான் இதற்கு காரணம் எனவும், சரவணன் தோல்வியடைய வேண்டும் என்றே செல்லூர் ராஜூ உள்ளடி வேலை பார்த்ததாகவும் முணுமுணுத்துக் கொண்டனர். இந்த தோல்வியின் எதிரொலியாக சரவணனுக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதிமுக நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி குறைகளை சுட்டிக்காட்ட முயன்றனர். செல்லூர் ராஜூ மீது அவர்கள் புகார் கூற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள், மேடையில் ஏறிய நிர்வாகியை சரமாரியாக அடித்து கீழே தள்ளினர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவும் “அவரை அடிங்க” என மைக்கிலேயே பேசினார். மேடையில் அமர்ந்திருந்த செம்மலை, அருகில் அமர்ந்திருந்த மருத்துவர் சரவணனை கைகாட்டி இவர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறினார்.

தொடர்ந்து கள ஆய்வுக்கூட்டம் நிறைவு பெற்றவுடன் வெளியில் வந்த மருத்துவர் சரவணன், “அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம்; இதெல்லாம் சாதாரணம்” எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

மதுரை அதிமுகவை 4 மாவட்டங்களாக பிரித்து அதில் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை பெற சரவணன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், சரவணன் வளர்ந்தால் அது தனது இடத்தை கேள்விக்குறியாக்கும் என செல்லூர் ராஜூ நினைப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இருவருக்கும் இடையிலான மோதலை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களும், மருத்துவர் சரவணன் ஆதரவாளர்களும் தனித்தனியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செல்லூர் ராஜூ, சரவணனை தவிர்த்து அங்கிருந்த மற்ற அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.

செல்லூர் ராஜூ, சரவணன் இடையிலான மோதல் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என ஆதங்கம் தெரிவிக்கும் அதிமுக தொண்டர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

Tags: DMKADMKtn politicsWho is showing off? : Sellar Raju - Saravanan to fight in Madurai!
Share
Tweet
SendShare
Previous Post

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

Next Post

விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் சோதனை : இஸ்ரோவின் அடுத்த அசத்தல் – சிறப்பு கட்டுரை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies