சிரியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சி : இந்தியாவுக்கு பாதிப்பா? - சிறப்பு கட்டுரை!
Jul 25, 2025, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சி : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 10, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரிய முன்னாள் அதிபர் அசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய ஆயுதக் குழுவினரின் கையில் சிரியா, இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறுமா? சிரியாவில் ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அரபு நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல், ஆட்சியாளர்களை அகற்றும் புரட்சிகள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளன. அரபி SPRING எனப்படும் தீவிரவாத ஆயுதக் குழுக்கள், டுனிசியா, எகிப்து, லிபியா, யேமன் போன்ற நாடுகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வரிசையில் 13 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் தொடங்கிய இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள், உள்நாட்டு போராகி இப்போது இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சியைப் பிடித்துள்ளது.

இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடாக இருந்தாலும், சிரியாவின் அரசியலமைப்பில் எந்த மதத்தின் பெயரும் இடம் பெறவில்லை. சிரியா ஒரு குடியரசு நாடாகும். மேலும் அரசியலமைப்பு ரீதியாக ஒரு மதச்சார்பற்ற நாடாகும்.

1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது. இஸ்லாமிய ஆயுதக் குழுவினர் , தங்கள் புதிய தாக்குதலைத் தொடங்கி வெறும் 11 நாட்களில், சிரிய தலைநகரைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆட்சியை இழந்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியுள்ளனர். அதிபர் பஷார் அல் அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்யா அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் வந்துள்ளதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் தலைவர் – அபு முகமது அல்-ஜவ்லானி தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் தலைநகர் டமாஸ்கஸின் மையப் பகுதியில் உள்ள உமையாத் சதுக்கத்தில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்திய மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய குடிமக்கள் சிரியா செல்லவும் தடை விதித்துள்ளது.

இந்தியாவுக்கும் சிரியாவுக்கு இடையே நீண்ட காலமாகவே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. குறிப்பாக அசாத்தின் பதவி காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையயேயான அரசுத்தரப்பு உறவுகள் மேலும் வலிமையாக இருந்து வந்தது. காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை சிரியா ஆதரித்துள்ளது

பாலஸ்தீனிய மற்றும் கோலன் குன்றுகள் மீதான சிரியாவின் உரிமைக் கோரலுக்கு, இந்தியா ஆதரவளித்தது. மேலும் ஐநா சபை கூட்டத்தில், கொண்டு வரப்பட்ட சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடையை இந்தியா ஆதரிக்க மறுத்தது.

மேலும் கொரொனா தொற்றுக் காலத்தில், சிரியா மீதான பொருளாதார தடையை நீக்கச் சொல்லி இந்தியா அழைப்பு விடுத்தது. 2011 ஆம் ஆண்டு அசாத்தின் ஆட்சிக்கு எதிராக நாட்டின் தெற்கில் கிளர்ச்சி தொடங்கியது.இது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து உள்நாட்டு போராக மாறியது.

சிரியா உள்நாட்டு போரின் போது , பல நாடுகள் சிரியாவைத் தனிமை படுத்தின. அரபு கூட்டமைப்பில் இருந்து சிரியாவை வெளியேற்றிய நிலையிலும் இந்தியா, சிரியாவை கைவிடவில்லை. சிரியாவுடனான அரசு உறவை இந்தியா தொடர்ந்தது. சிரியாவின் தலைநகரில் தூதரகத்தை இந்தியா தொடர்ந்து பராமரித்தது.

2003 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சிரியா தலைநகரில் இந்திய தொழில்நுட்பத்துடன் பயோ டெக்னாலஜி மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இது மட்டுமில்லாமல், சிரியாவின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாகும். 2022 ஆம் ஆண்டு சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் மக்தத் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இதனை தொடர்ந்து, உள்நாட்டு போரால் சிதைந்த நாட்டை மறு கட்டமைக்க, சுமார் 280 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை சிரியாவுக்கு இந்தியா அளித்தது.

2016 ஆம் ஆண்டில் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உணவு மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப் பட்டன. கோவிட் காலத்தில்10 மெட்ரிக் டன் மருந்துகளை இந்தியா சிரியாவுக்கு அனுப்பியது.

2023 ஆம் ஆண்டு சிரியா நிலநடுக்கத்தின் போது 30 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது. மேலும் STUDY IN INDIA திட்டத்தின் கீழ், முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்காக மொத்தம் 1500 இடங்கள் சிரியா மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிரியாவின் எண்ணெய் துறையில் இந்தியா இரண்டு குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. 2004ஆம் ஆண்டு ONGC மற்றும் IPR இன்டர்நேஷனல் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுக்கான ஒப்பந்தம் உருவானது. மேலும், சீனாவின் CNPC உடன் இணைந்து ONGC சிரியாவில் முதலீடு செய்துள்ளது.

சிரியாவை உள்ளடக்கிய இந்தியா-வளைகுடா-சூயஸ் கால்வாய், மத்திய தரைக் கடல் – ஐரோப்பா வழி தடத்தை உருவாக்குவதில் அதிக அளவில் இந்தியா முதலீடு செய்துள்ளது. எண்ணெய், அரிசி பருத்தி, மருந்து ஜவுளி, ஆகியவை பெரும் அளவில் இந்தியாவில் இருந்து சிரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிரியாவுடனான இந்தியாவின் நல்லுறவு, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்கு ஒரு வழியாக இருந்தது.

சிரியாவில் ஆட்சி மாற்றம், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் என்ன மாதிரியான தாக்கம் அல்லது விளைவை ஏற்படுத்தும் ? இது பற்றிய தெளிவான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இஸ்லாமிய ஆயுதக் குழுவினர் கையில் சிரியாவின் ஆட்சி இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்றே புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Tags: IndiarussiaSyria.Syrian President AssadIslamic armed groupsArab countries.Islamic extremistsecular country.Hayat Tahrir al-Sham group
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா முதலமைச்சருடன் அதானி சந்திப்பு!

Next Post

DEEP STATE மூலம் சதி செய்யும் அமெரிக்கா? பா.ஜ.க. புகாரும் பின்னணியும் – சிறப்பு கட்டுரை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies