லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களின் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ரகுமான் ஒரு உத்வேகமான நபராக இருப்பார் எனவும் டிரினிட்டி லாபான் இசைப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஹ்மான் இந்த பதவியில் 5 ஆண்டுகாலத்திற்கு தொடர்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.