அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைக்குமா? விவாதப்பொருளான இந்திய தொழிலதிபரின் கேள்வி? சிறப்பு கட்டுரை!
Nov 18, 2025, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைக்குமா? விவாதப்பொருளான இந்திய தொழிலதிபரின் கேள்வி? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், அமெரிக்க கிரீன் கார்டு கிடைக்குமா என்று தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் தலைவரான எலான் மஸ்க் அளித்த பதில், சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வேகமாக வளர்ந்து வரும் கணினி உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தேடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதற்கு ஈடாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் கூகுள் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் AI மற்றும் இணைய தேடல் திறன்களின் ஆற்றலையும் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு ஒரு சிறிய தேடல் தொழிற்நுட்ப START UP நிறுவனம் களமிறங்கியது. அது தான் ‘Perplexity AI’ .

இந்த புதிய நிறுவனத்தின் CEO ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பணிபுரிகிறார். OPEN AI மற்றும் META வின் OPEN SOURCE ஆன LAMA உள்ளிட்ட பல்வேறு பிரபல தேடல் தொழிற்நுட்பம் போலவே இந்த நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. சாதாரணமாக ஒரு நண்பருடன் உரையாடுவது போலவே இந்த தேடுபொறியுடன் உரையாடும் வசதி ‘Perplexity AI’ ல் அமைந்துள்ளது. இதன் காரணமாக இது ஒரு வலுவான ஆற்றல் மிகுந்த சக்தியாக உருவாகி வருகிறது.

இந்திய வம்சாவளியினரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தான் Perplexity AI-யின் இணை நிறுவனர் ஆவார். சென்னையில் உள்ள ஐஐடியில் பட்டம் பெற்ற அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார். முன்னதாக கூகுள் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டு தான் Perplexity AI என்ற புதிய தொழில்நுட்ப புரட்சியை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உருவாக்கி வருகிறார்.

இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள Perplexity AI, எதிர்காலத்தில் இந்தியா சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது என்று Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், நீண்ட காலமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனினும், அவருக்கு இன்னும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கிடைக்க வில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024க்கு முன்னதாக குடியேற்ற விவாதங்களுக்கு மத்தியில் “இன்னும் கிரீன் கார்டு கிடைக்கவில்லை” என்று Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறி இருந்தார்.

இந்நிலையில், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கிரீன் கார்டைப் பெறுவதற்காக மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பதாகவும், தானும் கிரீன் கார்டைப் பெற வேண்டுமா என்பது குறித்து தனது எக்ஸ் தளத்தில் தன்னைப் பின்தொடர்பவர்களிடம் யோசனைகள் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமெரிக்க அரசின் செயல் திறன் துறையின் தலைவரான எலான் மஸ்க் வெறுமனே “ஆம்” என்று ஒற்றை சொல்லில் பதிலளித்து உள்ளார்.

இந்த ஒற்றை வார்த்தை, உள்ளடக்கத்தில் மிகக்குறைந்ததாக இருந்தாலும், பயனர்களிடமிருந்து பிளாட்ஃபார்ம் முழுவதும் பலத்த எதிர்வினைகளைப் பெற்றது. அதற்கு அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஆதரவுக்கு நன்றி என்று சொல்லி சிவப்பு இதயம் மற்றும் கூப்பிய கைகள் ஆகிய இரண்டு EMOJI களைப் பதிவிட்டிருந்தார்.

அரவிந்த் ஸ்ரீனிவாஸுடன் மஸ்க் பேசுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, திறமையான நபர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் நுழைவதில் உள்ள சிரமம் குறித்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த சுழலில், அமெரிக்க குடியேற்ற அமைப்பு பற்றி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறிய கருத்துக்கு, நோபல் பரிசு பெற்ற ஒருவர் சட்டப்பூர்வமாக நுழைவதை விட, கொலைகாரன் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டுவது ஏன்? அரசு அதை சரி செய்யும் என்று மஸ்க் பதிலளித்து இருந்தார்.

கிரீன் கார்டு, என்பது அதிகாரப்பூர்வ அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதன் அடையாளமாகும். கிரீன் கார்டு என்பது ஒரு தனிநபருக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் உரிமையை வழங்கும் ஆவணமாகும். இது வெளிநாட்டினர் அமெரிக்காவில் காலவரையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.

அமெரிக்க குடியேற்றம் குறித்த புதிய விவாதத்தை, Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ், மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார்.

இதில் எலான் மஸ்கின் குடியுரிமைப் பயணமும் கவனிக்கத் தக்கது. 1971 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்த எலான் மஸ்க், 17 வயதில் கனடாவுக்குச் செல்வதற்கு முன், தனது தாயின் பரம்பரை மூலம் கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்றார்.

அமெரிக்கக் குடியுரிமைக்காக எலான் மஸ்க் பென்சில்வேனியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழில் முனைவோராக தன்னை உருவாக்கினார். தொடர்ந்து, 1995ம் ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இப்படியான வழிகளில் எலான் மஸ்க் அமெரிக்காவில் தனது இருப்பை உறுதிப்படுத்தினார்.

Zip2, PayPalமற்றும் இறுதியில் Tesla Motors மற்றும் SpaceX போன்ற நிறுவனங்களைத் தொடங்கியதால், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெற்றார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்க குடியுரிமை வரையிலான எலான் மஸ்க்கின் பயணம், அமெரிக்காவில் வாய்ப்புகளைத் தேடும் பல புலம்பெயர்ந்த தொழில்முனைவோரின் ஆசைகளைப் பிரதிபலிக்கிறது.

எனவே தான், திறன்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கும் தகுதி அடிப்படையிலான குடியேற்றம் என்பதை எலான் மஸ்க் வலியுறுத்தி உள்ளார். மேலும், கிரீன் கார்டு செயல்முறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் எலான் மஸ்க் தொடர்ந்து கூறி வருகிறார்.

Tags: green card'Perplexity AI'Elon muskArtificial intelligenceUnited StatesArvind Srinivas
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் காரசார விவாதம் : ஜேபிசி பரிசீலனையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – சிறப்பு தொகுப்பு!

Next Post

பாஜக எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம் – ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies