கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!
Aug 24, 2025, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதனால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்திற்குக் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

சென்னைக்கு அழகு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரை , தலைமை செயலகம், ரிப்பன் கட்டிடம் ,உயர் நீதிமன்றம் ,மெட்ரோ ரயில்கள், அருங்காட்சியகங்கள் எனப் பல இருக்கின்றன. ஆனால் மறுபுறமோ வட சென்னை மக்களின் பெருந்துயராக கொடுங்கையூர் குப்பை கிடங்கு காட்சியளிக்கிறது.

நாள் ஒன்றுக்கு இந்த குப்பை கிடங்கில் சென்னை முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதே நேரத்தில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு உரமாகவும் மாற்றப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய எரிவுலை திட்டத்தை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. இந்தத் திட்டத்தால் டன் கணக்கில் குப்பைகள் எரிக்கப்பட்டு அவை மின் ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இதனால் சென்னை மாநகராட்சிக்கு மின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் கொடுங்கையூர் கிடங்கில் உள்ள குப்பையின் அளவும் குறையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தத் திட்டத்தை கொடுங்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏற்க மறுக்கின்றனர். ஏற்கனவே பெருந்துயருக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடசென்னைவாசிகள் எரிவுலை திட்டத்தால் மேலும் உடல் உபாதைகளும் , சுவாச பிரச்சனைகளும் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். பிறக்கும் எங்கள் குழந்தைகள் நோயுடன் பிறக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தால் கொடுங்கையூர் மக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும் அதனை கைவிடக் கோரியும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கையெழுத்திட்ட கடிதம் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது.

வடசென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையால் சிறுவர்கள் வரை சீரழிவது தொடர்கதையாகி வருகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசுபாடும் ஏற்பட்டு பொதுமக்களின் உடல் நலனுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் வடசென்னை மக்கள் மேலும் ஒரு பேரிடியாய் எரிவுலை திட்டத்தை கருதுகின்றனர்.

சுவாச பிரச்சனைகள், புற்றுநோய் ,மூச்சு திணறல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் தீங்கு விளைவிக்கும் எரிவுலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட்டு விட்டு வடசென்னை சூழலுக்கு ஏற்றார் போல பாதுகாப்பான கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவ ஆராய்ச்சியாளர் விஸ்வஜாவும் வலியுறுத்துகிறார்.

 

Tags: Chennaichennai corporationKodungaiyur garbage dump.electricity production
ShareTweetSendShare
Previous Post

நெல்லை அருகே உணவக உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – இளம் சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

Next Post

சேலத்தில் இரவு நேரங்களில் உலா வரும் மங்கி குல்லா கொள்ளையர்கள் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

Related News

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies