கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதனால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்திற்குக் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

சென்னைக்கு அழகு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரை , தலைமை செயலகம், ரிப்பன் கட்டிடம் ,உயர் நீதிமன்றம் ,மெட்ரோ ரயில்கள், அருங்காட்சியகங்கள் எனப் பல இருக்கின்றன. ஆனால் மறுபுறமோ வட சென்னை மக்களின் பெருந்துயராக கொடுங்கையூர் குப்பை கிடங்கு காட்சியளிக்கிறது.

நாள் ஒன்றுக்கு இந்த குப்பை கிடங்கில் சென்னை முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதே நேரத்தில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு உரமாகவும் மாற்றப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய எரிவுலை திட்டத்தை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. இந்தத் திட்டத்தால் டன் கணக்கில் குப்பைகள் எரிக்கப்பட்டு அவை மின் ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இதனால் சென்னை மாநகராட்சிக்கு மின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் கொடுங்கையூர் கிடங்கில் உள்ள குப்பையின் அளவும் குறையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தத் திட்டத்தை கொடுங்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏற்க மறுக்கின்றனர். ஏற்கனவே பெருந்துயருக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடசென்னைவாசிகள் எரிவுலை திட்டத்தால் மேலும் உடல் உபாதைகளும் , சுவாச பிரச்சனைகளும் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். பிறக்கும் எங்கள் குழந்தைகள் நோயுடன் பிறக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தால் கொடுங்கையூர் மக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும் அதனை கைவிடக் கோரியும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கையெழுத்திட்ட கடிதம் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது.

வடசென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையால் சிறுவர்கள் வரை சீரழிவது தொடர்கதையாகி வருகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசுபாடும் ஏற்பட்டு பொதுமக்களின் உடல் நலனுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் வடசென்னை மக்கள் மேலும் ஒரு பேரிடியாய் எரிவுலை திட்டத்தை கருதுகின்றனர்.

சுவாச பிரச்சனைகள், புற்றுநோய் ,மூச்சு திணறல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் தீங்கு விளைவிக்கும் எரிவுலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட்டு விட்டு வடசென்னை சூழலுக்கு ஏற்றார் போல பாதுகாப்பான கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவ ஆராய்ச்சியாளர் விஸ்வஜாவும் வலியுறுத்துகிறார்.

 

Tags: electricity productionChennaichennai corporationKodungaiyur garbage dump.
ShareTweetSendShare
Previous Post

நெல்லை அருகே உணவக உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – இளம் சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

Next Post

சேலத்தில் இரவு நேரங்களில் உலா வரும் மங்கி குல்லா கொள்ளையர்கள் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies