கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதனால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்திற்குக் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

சென்னைக்கு அழகு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரை , தலைமை செயலகம், ரிப்பன் கட்டிடம் ,உயர் நீதிமன்றம் ,மெட்ரோ ரயில்கள், அருங்காட்சியகங்கள் எனப் பல இருக்கின்றன. ஆனால் மறுபுறமோ வட சென்னை மக்களின் பெருந்துயராக கொடுங்கையூர் குப்பை கிடங்கு காட்சியளிக்கிறது.

நாள் ஒன்றுக்கு இந்த குப்பை கிடங்கில் சென்னை முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதே நேரத்தில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு உரமாகவும் மாற்றப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய எரிவுலை திட்டத்தை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. இந்தத் திட்டத்தால் டன் கணக்கில் குப்பைகள் எரிக்கப்பட்டு அவை மின் ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இதனால் சென்னை மாநகராட்சிக்கு மின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் கொடுங்கையூர் கிடங்கில் உள்ள குப்பையின் அளவும் குறையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தத் திட்டத்தை கொடுங்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏற்க மறுக்கின்றனர். ஏற்கனவே பெருந்துயருக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடசென்னைவாசிகள் எரிவுலை திட்டத்தால் மேலும் உடல் உபாதைகளும் , சுவாச பிரச்சனைகளும் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். பிறக்கும் எங்கள் குழந்தைகள் நோயுடன் பிறக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தால் கொடுங்கையூர் மக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும் அதனை கைவிடக் கோரியும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கையெழுத்திட்ட கடிதம் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது.

வடசென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையால் சிறுவர்கள் வரை சீரழிவது தொடர்கதையாகி வருகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசுபாடும் ஏற்பட்டு பொதுமக்களின் உடல் நலனுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் வடசென்னை மக்கள் மேலும் ஒரு பேரிடியாய் எரிவுலை திட்டத்தை கருதுகின்றனர்.

சுவாச பிரச்சனைகள், புற்றுநோய் ,மூச்சு திணறல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் தீங்கு விளைவிக்கும் எரிவுலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட்டு விட்டு வடசென்னை சூழலுக்கு ஏற்றார் போல பாதுகாப்பான கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவ ஆராய்ச்சியாளர் விஸ்வஜாவும் வலியுறுத்துகிறார்.

 

Tags: electricity productionChennaichennai corporationKodungaiyur garbage dump.
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை அருகே உணவக உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – இளம் சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

Next Post

சேலத்தில் இரவு நேரங்களில் உலா வரும் மங்கி குல்லா கொள்ளையர்கள் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies