இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பட்டினம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம், மேற்கு மாம்பலத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து என குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை குறித்தும் அதில் வசிக்கும் மக்களின் பயம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

முழுவதுமாக சேதமடைந்த சுவர்கள்… அடிக்கடி உடைந்து விழும் பால்கனிகள்… எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் நிலையில் காணப்படும் மேற்கூரைகள் என 24 மணி நேரமும் பொதுமக்களை உயிர் பயத்துடனே வைத்திருக்கும் இவை தான் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள்.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளின் பால்கனி இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியான துயரத்திலிருந்து மீள்வதற்குள்ளாகவே தற்போது அதே குடியிருப்பில் மற்றொரு பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடம் என என அறிவித்த பின்னரும், மாற்று ஏற்பாடுகளை செய்து தராத அரசு நிர்வாகத்தால், உயிருக்கு பயந்து கொண்டே அங்கேயே வாழக்கூடிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகம் மாற்று இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக வெளியேற தயாராக இருப்பதாகவும் அக்குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை பட்டினம்பாக்கம் குடியிருப்புகள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்த குடியிருப்புகளின் நிலை அனைத்தும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்பின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்திருக்கும் சம்பவமும் அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

குடியிருப்புகளை காலி செய்யுமாறு கூறும் அரசு அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் குறித்து எதையுமே தெரிவிக்கவில்லை என கூறும் குடியிருப்புவாசிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகளை விட்டு வெளியேறியவர்களுக்கு தற்போது வரை புதிய குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்

அடிக்கடி ஏற்படும் விபத்துகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வல்லுநர் குழு 50க்கும் அதிகமான குடியிருப்புகள் பொதுமக்கள் வாழத் தகுதியற்றவை எனவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை வழங்கியது. ஆனாலும் பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பழுதடைந்த குடியிருப்புகளை உடனடியாக அகற்றுவதோடு, ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் தங்களை வெளியேற்றுவதற்கு முன்பாகவே மாற்று ஏற்பாடுகளை செய்துத் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Srinivasapuramhousing board house collapseChennaitamilnadu governmentWest MambalamPattinambakkam
ShareTweetSendShare
Previous Post

33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த 6 வயது சிறுவன்!

Next Post

குண்டும் குழியுமாக காணப்படும் சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை – வாகன ஓட்டிகள் அவதி!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies