இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? - சிறப்பு தொகுப்பு!
Jul 5, 2025, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பட்டினம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம், மேற்கு மாம்பலத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து என குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை குறித்தும் அதில் வசிக்கும் மக்களின் பயம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

முழுவதுமாக சேதமடைந்த சுவர்கள்… அடிக்கடி உடைந்து விழும் பால்கனிகள்… எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் நிலையில் காணப்படும் மேற்கூரைகள் என 24 மணி நேரமும் பொதுமக்களை உயிர் பயத்துடனே வைத்திருக்கும் இவை தான் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள்.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளின் பால்கனி இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியான துயரத்திலிருந்து மீள்வதற்குள்ளாகவே தற்போது அதே குடியிருப்பில் மற்றொரு பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடம் என என அறிவித்த பின்னரும், மாற்று ஏற்பாடுகளை செய்து தராத அரசு நிர்வாகத்தால், உயிருக்கு பயந்து கொண்டே அங்கேயே வாழக்கூடிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகம் மாற்று இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக வெளியேற தயாராக இருப்பதாகவும் அக்குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை பட்டினம்பாக்கம் குடியிருப்புகள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்த குடியிருப்புகளின் நிலை அனைத்தும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்பின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்திருக்கும் சம்பவமும் அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

குடியிருப்புகளை காலி செய்யுமாறு கூறும் அரசு அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் குறித்து எதையுமே தெரிவிக்கவில்லை என கூறும் குடியிருப்புவாசிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகளை விட்டு வெளியேறியவர்களுக்கு தற்போது வரை புதிய குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்

அடிக்கடி ஏற்படும் விபத்துகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வல்லுநர் குழு 50க்கும் அதிகமான குடியிருப்புகள் பொதுமக்கள் வாழத் தகுதியற்றவை எனவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை வழங்கியது. ஆனாலும் பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பழுதடைந்த குடியிருப்புகளை உடனடியாக அகற்றுவதோடு, ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் தங்களை வெளியேற்றுவதற்கு முன்பாகவே மாற்று ஏற்பாடுகளை செய்துத் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: West MambalamPattinambakkamSrinivasapuramhousing board house collapseChennaitamilnadu government
ShareTweetSendShare
Previous Post

33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த 6 வயது சிறுவன்!

Next Post

குண்டும் குழியுமாக காணப்படும் சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை – வாகன ஓட்டிகள் அவதி!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies