சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!
Jan 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 26, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி, 610 பேர் பலியாகினர். சுனாமி தாக்கியதன் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமி ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி கடலுக்கு செல்லவில்லை. திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சுனாமி பேரலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும், கடல் மற்றும் மீனவர்கள் பாதுகாக்க வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, ஏாளமான பொது மக்கள் மற்றும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், கடல் அன்னைக்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பேரிடர்காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்று பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உயிரிழந்தவர்களுக்கு  அவர்களது உறவினர்கள் திதி கொடுத்தும், கடலில் பால் ஊற்றியும் மரியாதை செய்தனர். நினைவு ஸ்தூபி மற்றும் இறந்தவர்கள் நினைவிடத்தில் பொது மக்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மௌன ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல், பூம்புகார், சந்திரபாடி , திருமுல்லைவாசல், பழையார் மற்றும் வானகிரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை எம்.பி சுதா., பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

 

Tags: laying wreathskanyakumariCuddaloreMelamanakudiTsunami 20th anniversary
ShareTweetSendShare
Previous Post

தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

Next Post

அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் – ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies