சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!
Sep 10, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 26, 2024, 02:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி, 610 பேர் பலியாகினர். சுனாமி தாக்கியதன் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமி ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி கடலுக்கு செல்லவில்லை. திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சுனாமி பேரலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும், கடல் மற்றும் மீனவர்கள் பாதுகாக்க வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, ஏாளமான பொது மக்கள் மற்றும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், கடல் அன்னைக்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பேரிடர்காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்று பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உயிரிழந்தவர்களுக்கு  அவர்களது உறவினர்கள் திதி கொடுத்தும், கடலில் பால் ஊற்றியும் மரியாதை செய்தனர். நினைவு ஸ்தூபி மற்றும் இறந்தவர்கள் நினைவிடத்தில் பொது மக்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மௌன ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல், பூம்புகார், சந்திரபாடி , திருமுல்லைவாசல், பழையார் மற்றும் வானகிரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை எம்.பி சுதா., பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

 

Tags: laying wreathskanyakumariCuddaloreMelamanakudiTsunami 20th anniversary
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

Next Post

அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் – ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது!

Related News

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies