ஆஸ்திரேலிய கிரிக்கெட் - ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் - சிறப்பு தொகுப்பு!
Sep 9, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் – ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 29, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் 12 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் பிரிவில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், இந்திய கிரிக்கெட் வீரர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மேற்கு மெல்பர்ன் புறநகரில் தெற்காசிய பங்கேற்பாளர்களைக் கொண்ட கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கை எட்டு ஆண்டுகளில் நூற்று பத்தில் இருந்து இருந்து 420 ஆக உயர்ந்துள்ளது.

முன்னாள் FOOTIE வீரரும், விளையாட்டுத் தொகுப்பாளருமான பால் கென்னடியிடம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில், இந்தியாவின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பால் கென்னடி, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் எதிர்காலமாக இந்தியா உட்பட தெற்காசிய கிரிக்கெட் வீரர்களே இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

எல்லா விளையாட்டுக்களிலும் காலம் தோறும் அந்த விளையாட்டை விருப்பத்துடன் விளையாடும் வீரர்கள் தேவைபடுகிறார்கள். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால், ஆஸ்திரேலியாவின் வாழ்க்கையில் இந்தியா ஒரு பெரிய பகுதியாகி விட்டது. புலம் பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஸ்திரேலியாவில் அனைத்து மட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே. ஆனால், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Cricket Blast எனப்படும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கிரிக்கெட் பாணி அறிமுகத் திட்டத்தில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.

கடந்த ஆண்டு Cricket Blast திட்டத்தில் சேர்ந்தவர்களில் 26 சதவீதம் சிறுவர்களும், 29 சதவீதம் சிறுமிகளும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

உள்ளூர், மாநில மற்றும் தேசிய அமைப்புகளால் நடத்தப்படும் பிரதிநிதித்துவ கிரிக்கெட் போட்டிகளில் கூட 17 சதவீதம் பேர் தெற்காசிய வம்சாவளியினர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். மேலும், 12 வயதிற்குட்பட்ட பிரிவில், இந்த எண்ணிக்கை ஆண்களில் 40 சதவீதமாகவும், பெண்களில் 25 சதவீதமாகவும் உள்ளது.

இது ஒரு புறம் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் தொழில்முறை கிரிக்கெட் வீரராக இன்னும் நிறைய தெற்காசியர்கள் வரவில்லை. தெற்காசிய குடும்பங்களைச் சேர்ந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது. உஸ்மான் கவாஜா மற்றும் அலனா கிங் ஆகியோர் மட்டுமே தேசிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மாநில அளவில் தெற்காசிய வீரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Tags: FOOTIE playerINDIANSaustralia cricketSouth Asian countriesMelbourne.
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் – முழு விவரம்!

Next Post

மலிவான அரசியலில் ஈடுபடுவதை காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies