மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?

Murugesan M by Murugesan M
Dec 31, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலமிடுவது பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது… அதுப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!

மார்கழி என்றாலே எல்லா கடவுள்களுக்கும் உகந்த மாதமாகும்…இதை தணுர் மாதம் என்றும் அழைப்பார்கள்… குறிப்பாக மார்கழியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் கோலங்களுக்கு பின்னால் ஆன்மீகம் , அறிவியல் என நிறைய காரணங்கள் உள்ளன.

மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்மா முகுர்த்த நேரம்… அதிகாலை நான்கு முதல் ஆறு மணிக்குள் எழுந்து , வீட்டு வாசலில் கோலமிட்டு இறைவனை வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம்முடைய துன்பங்களை நீக்கி இன்பம் தருவார்கள் என்பது நம்பிக்கை.

சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா என வாசலில் போடப்படும் கோலங்களுக்கு அழகு சேர்ப்பது என்னவோ இந்த கலர் கோலபொடிகள்தான். புள்ளி வைத்து போடும் கம்பி கோலங்கள் மீதான ஆர்வம் குறைந்து மக்கள் ரங்கோலி கோலத்திற்கு மாறியபோதுதான் மார்கெட்டில் கலர் கோலப்பொடியின் மவுசும் அதிகரித்துள்ளது.

மார்கழி மாதத்தில்தான் பூமி ஓசோன் படலத்திற்கு அருகில் வரும்… அப்போது பூமியில் தூய்மையான ஆக்சிஜன் அதிக அளவில் இருக்கும்… அதிகாலையில் கிடைக்கக்கூடிய தூய்மையான ஆக்சிஜனை சுவாசிக்கும்போது சோம்பல் நீங்கி உடல் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மார்கழி கோலங்களில் வைக்கப்படும் பூசணி பூவுக்கு தனி சிறப்பு உண்டு… மேட்டரி மோனி போன்ற எந்த வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் தங்களுடைய வீட்டில் திருமண வயதில் ஆணோ அல்லது பெண்ணோ இருந்தால் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வாசலில் பூசணி பூ வைப்பார்கள்.

அப்படி வைக்கும்போது அந்தத் தெருவின் வழியாக செல்பவர்கள், கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்திருக்கும் வீடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்தத்திலோ அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலோ திருமணத்திற்கு பேசி முடிப்பார்கள்.

குறிப்பாக பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலமிடும்போது யோகா பயற்சி செய்த பலன்கள் கிடைக்கும்… அதுவும் புள்ளி வைத்து கம்பி கோலம் போடுவது பெண்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது… அதுமட்டுமில்லாமல் அரிசி மாவில் போடும் கோலத்தை எறுப்பு , பறவை போன்ற உயிரினங்கள் உணவாக சாப்பிடுவதால் அரிசி மாவில் கோலம் போடுவதையும் பெண்கள் மகத்துவமாக பார்க்கின்றனர்.

வீட்டிற்கு அழகும் சேர்ப்பது மட்டுமில்லாமல் அறிவியல் ரீதியில் நிறைய நன்மைகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது இந்த மார்கழி வண்ண கோலங்கள்.

Tags: First day of Margalzhi! : Worship Tirupa in the temple by singing hymns!Why do you have to get up early in the morning in the month of March?Margalzhi!
ShareTweetSendShare
Previous Post

பறவையா? தடுப்புச்சுவரா? : தென் கொரியா விமான விபத்திற்கு காரணம் என்ன?

Next Post

மீண்டும் அசத்திய இஸ்ரோ! : விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பில் சாதனை முயற்சி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies