அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன், ஏற்கனவே 2018ம் ஆண்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த தொழிலதிபரை கடத்திய ஞானசேகரன்,
25 லட்சம் ரூபாய் வழங்கவில்லை என்றால் தொழிலதிபரை கொலை செய்து விடுவேன் என அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து திண்டிவனத்தில் பதுங்கியிருந்த ஞானசேகரனை சுற்றிவளைத்து கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்து, கூட்டாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சிறையில் இருந்து வெளிவந்த பின்பே ஞானசேகரன் பிரியாணி கடை நடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.