புத்தாண்டு கொண்டாட்டம் - சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Oct 2, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் – சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Web Desk by Web Desk
Jan 1, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா தளத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்களுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள காமராஜர் அணை மற்றும் பைன் மரக்காடுகளை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

இதனிடையே கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளதால் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படும். அதன்படி, புத்தாண்டு தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், குறைவான பயணிகளே வருகை தந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கொடைக்கானல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரம் கூட்டம் அதிகம் இல்லாததால் நட்சத்திர ஏரி, கோக்கஸ் வாக், பிரைன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் பொழுதைக் கழித்து விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

புத்தாண்டு விடுமுறையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், விடுமுறை நாட்களையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தொடர்ந்து குடும்பமாக அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர்.

Tags: ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்kodaikanalootynew year wishNew Year. 2025Happy New Year
ShareTweetSendShare
Previous Post

குடும்பத்தகராறு – 5 பேரை கொலை செய்த இளைஞர் கைது!

Next Post

ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கற்க வேண்டும் – சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தல்!

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies