புத்தாண்டு கொண்டாட்டம் - சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் – சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா தளத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்களுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள காமராஜர் அணை மற்றும் பைன் மரக்காடுகளை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

இதனிடையே கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளதால் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படும். அதன்படி, புத்தாண்டு தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், குறைவான பயணிகளே வருகை தந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கொடைக்கானல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரம் கூட்டம் அதிகம் இல்லாததால் நட்சத்திர ஏரி, கோக்கஸ் வாக், பிரைன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் பொழுதைக் கழித்து விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

புத்தாண்டு விடுமுறையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், விடுமுறை நாட்களையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தொடர்ந்து குடும்பமாக அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர்.

Tags: ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்kodaikanalootynew year wishNew Year. 2025Happy New Year
ShareTweetSendShare
Previous Post

குடும்பத்தகராறு – 5 பேரை கொலை செய்த இளைஞர் கைது!

Next Post

ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கற்க வேண்டும் – சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies