ராசாவே உன்ன காணாத நெஞ்சு... காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? - சிறப்பு கட்டுரை!
Sep 29, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் காந்தக்குரலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம். தமித் திரையிசை ரசிகர்களை தனது குரலால் ஈர்த்த பாடகர் ஜெயச்சந்திரன் குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்ப்போம்.

கண்ணுக்கொரு வண்ணக்கிளி… காதுக்கொரு கானக்குயில்… நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா… என்பதைப் போல் மென்குரலுக்கொரு ஜெயச்சந்திரன் என்று சொன்னால் அது மிகையல்ல.

1944-ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள ரவிபுரத்தில் பிறந்தவர் ஜெயச்சதிரன். தந்தை இசைத்துறையில் இருந்ததால் இயல்பாகவே ஜெயச்சந்திரனுக்கு அதில் ஆர்வம் இருந்தது.

சிறுவயதிலேயே மிருதங்கம் வாசிக்கத் தொடங்கிய அவர் அதற்காக மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளார். 1958-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சிறந்த பாடகருக்கான விருதை K.J.யேசுதாஸ் வாங்கிய போது, மிருதங்க வாசிப்புக்கான விருதை பெற்றவர் ஜெயச்சந்திரன். 1960-களில் மலையாளத் திரைப்படங்களில் பாடத்தொடங்கிய அவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.விஸ்வநாதனைத் தொடர்ந்து இளையராஜாவிடம் பாடத்தொடங்கினார் ஜெயச்சந்திரன். இசைஞானியின் இசையில் காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மெலடியும் ஜெயச்சந்திரனின் மென்குரலும் சேர்ந்தபோது திரையில் மேஜிக் நிகழ்ந்தது. தேவா, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ் என அனைத்து தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் பாடியவர் ஜெயச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தேசிய விருது, மாநில அரசுகளின் விருதுகள் மற்றும் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர் ஜெயச்சந்திரன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கேரள மாநிலம் திருச்சூரில் சிகிச்சை பலனின்றி 80-ஆவது வயதில் காலமானார். காதல், ஏக்கம், பிரிவு, சோகம், பக்தி என எந்த உணர்வாக இருந்தாலும் அதைச் சிறப்பாக வெளிப்படுத்தும் சில பாடகர்களில் ஜெயச்சந்திரனும் ஒருவர். இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் தமது மென்குரல் மூலம் மக்களுக்கு இளைப்பாறுதலை வழங்கிக் கொண்டே இருப்பார் ஜெயச்சந்திரன்.

 

Tags: playback singer Jayachandran passed awayRavipurammusic industryilayarajiaMalayalam filmsKeralakochi
ShareTweetSendShare
Previous Post

ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies