ராசாவே உன்ன காணாத நெஞ்சு... காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் காந்தக்குரலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம். தமித் திரையிசை ரசிகர்களை தனது குரலால் ஈர்த்த பாடகர் ஜெயச்சந்திரன் குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்ப்போம்.

கண்ணுக்கொரு வண்ணக்கிளி… காதுக்கொரு கானக்குயில்… நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா… என்பதைப் போல் மென்குரலுக்கொரு ஜெயச்சந்திரன் என்று சொன்னால் அது மிகையல்ல.

1944-ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள ரவிபுரத்தில் பிறந்தவர் ஜெயச்சதிரன். தந்தை இசைத்துறையில் இருந்ததால் இயல்பாகவே ஜெயச்சந்திரனுக்கு அதில் ஆர்வம் இருந்தது.

சிறுவயதிலேயே மிருதங்கம் வாசிக்கத் தொடங்கிய அவர் அதற்காக மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளார். 1958-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சிறந்த பாடகருக்கான விருதை K.J.யேசுதாஸ் வாங்கிய போது, மிருதங்க வாசிப்புக்கான விருதை பெற்றவர் ஜெயச்சந்திரன். 1960-களில் மலையாளத் திரைப்படங்களில் பாடத்தொடங்கிய அவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.விஸ்வநாதனைத் தொடர்ந்து இளையராஜாவிடம் பாடத்தொடங்கினார் ஜெயச்சந்திரன். இசைஞானியின் இசையில் காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மெலடியும் ஜெயச்சந்திரனின் மென்குரலும் சேர்ந்தபோது திரையில் மேஜிக் நிகழ்ந்தது. தேவா, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ் என அனைத்து தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் பாடியவர் ஜெயச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தேசிய விருது, மாநில அரசுகளின் விருதுகள் மற்றும் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர் ஜெயச்சந்திரன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கேரள மாநிலம் திருச்சூரில் சிகிச்சை பலனின்றி 80-ஆவது வயதில் காலமானார். காதல், ஏக்கம், பிரிவு, சோகம், பக்தி என எந்த உணர்வாக இருந்தாலும் அதைச் சிறப்பாக வெளிப்படுத்தும் சில பாடகர்களில் ஜெயச்சந்திரனும் ஒருவர். இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் தமது மென்குரல் மூலம் மக்களுக்கு இளைப்பாறுதலை வழங்கிக் கொண்டே இருப்பார் ஜெயச்சந்திரன்.

 

Tags: Keralakochiplayback singer Jayachandran passed awayRavipurammusic industryilayarajiaMalayalam films
ShareTweetSendShare
Previous Post

ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

Related News

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies