ராசாவே உன்ன காணாத நெஞ்சு... காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? - சிறப்பு கட்டுரை!
Sep 9, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் காந்தக்குரலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம். தமித் திரையிசை ரசிகர்களை தனது குரலால் ஈர்த்த பாடகர் ஜெயச்சந்திரன் குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்ப்போம்.

கண்ணுக்கொரு வண்ணக்கிளி… காதுக்கொரு கானக்குயில்… நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா… என்பதைப் போல் மென்குரலுக்கொரு ஜெயச்சந்திரன் என்று சொன்னால் அது மிகையல்ல.

1944-ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள ரவிபுரத்தில் பிறந்தவர் ஜெயச்சதிரன். தந்தை இசைத்துறையில் இருந்ததால் இயல்பாகவே ஜெயச்சந்திரனுக்கு அதில் ஆர்வம் இருந்தது.

சிறுவயதிலேயே மிருதங்கம் வாசிக்கத் தொடங்கிய அவர் அதற்காக மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளார். 1958-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சிறந்த பாடகருக்கான விருதை K.J.யேசுதாஸ் வாங்கிய போது, மிருதங்க வாசிப்புக்கான விருதை பெற்றவர் ஜெயச்சந்திரன். 1960-களில் மலையாளத் திரைப்படங்களில் பாடத்தொடங்கிய அவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.விஸ்வநாதனைத் தொடர்ந்து இளையராஜாவிடம் பாடத்தொடங்கினார் ஜெயச்சந்திரன். இசைஞானியின் இசையில் காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மெலடியும் ஜெயச்சந்திரனின் மென்குரலும் சேர்ந்தபோது திரையில் மேஜிக் நிகழ்ந்தது. தேவா, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ் என அனைத்து தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் பாடியவர் ஜெயச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தேசிய விருது, மாநில அரசுகளின் விருதுகள் மற்றும் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர் ஜெயச்சந்திரன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கேரள மாநிலம் திருச்சூரில் சிகிச்சை பலனின்றி 80-ஆவது வயதில் காலமானார். காதல், ஏக்கம், பிரிவு, சோகம், பக்தி என எந்த உணர்வாக இருந்தாலும் அதைச் சிறப்பாக வெளிப்படுத்தும் சில பாடகர்களில் ஜெயச்சந்திரனும் ஒருவர். இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் தமது மென்குரல் மூலம் மக்களுக்கு இளைப்பாறுதலை வழங்கிக் கொண்டே இருப்பார் ஜெயச்சந்திரன்.

 

Tags: playback singer Jayachandran passed awayRavipurammusic industryilayarajiaMalayalam filmsKeralakochi
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies