மகா கும்பமேளா : கழிவு மேலாண்மையில் அசத்தும் உ.பி. அரசு - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா கும்பமேளா : கழிவு மேலாண்மையில் அசத்தும் உ.பி. அரசு – சிறப்பு கட்டுரை!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 16, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜில் கூடியுள்ள நிலையில் கழிவு மேலாண்மைக்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்று வரும் கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பர் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும், ஆன்மாவை தூய்மைப்படுத்தும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் நாள்தோறும் பல லட்சம் பேர் பிரயாக்ராஜ் வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் கங்கை – யமுனை நதிக்கரையில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவில் மகா கும்ப நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக கோடிக்கணக்கானோர் வருகை தருவதால் கழிவு மேலாண்மையை கையாள்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதற்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பல்வேறு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது.

நாளொன்றுக்கு 16 மில்லியன் லிட்டர் மனிதக் கழிவையும், 240 மில்லியன் லிட்டர் கழிவு நீரையும் கையாள்வது சாதாரண செயல் அல்ல. அந்த பணிக்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் இணைந்து உருவாக்கிய HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR என்ற சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. இதை ஒரு அதிநவீன WASHING MACHINE என்று சொல்லலாம். ஆனால் துணிக்கு பதிலாக மனிதக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணியை HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR செய்கிறது.

அதே போல் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றுவதற்காக GEOTUBE TECHNOLOGY என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக BIOREMEDIATION என்னும் முறையும் பின்பற்றப்படுகிறது. பெரிய குளங்களில் கழிவுநீரை சேமித்து நுண்ணுயிர்கள் மூலம் அவற்றை தூய்மைப்படுத்துவதே BIOREMEDIATION.

கும்பமேளாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழாயிரம் கோடி ரூபாயில் கழிவு மேலாண்மைக்காக மட்டுமே ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக 316 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 45 ஆயிரம் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகளை காத்தல், சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் தடுத்தல் போன்ற பணிகளுக்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கழிவு மேலாண்மையில் மனிதர்களின் பங்களிப்பை வெகுவாக குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாபெரும் ஆன்மிக விழாக்களை தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி கையாள்வது என்பதற்கு உதாரணமாக மகாகும்பமேளா மாறியிருக்கிறது. கழிவு மேலாண்மையில் இந்திய தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு பலன் தரும் என்பதை உலகுக்கு மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன மகாகும்பமேளாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.

Tags: ISROuttar pradeshPrayagrajMaha Kumbh MelaTriveni Sangamwaste management systemBhabha Atomic Research Centre.
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் விழா – தெப்பக்காடு யானைகள் முகாமில் உற்சாக கொண்டாட்டம்!

Next Post

அமெரிக்காவில் காட்டு தீ : தீயணைப்பு பணியில் கடல் நீரை பயன்படுத்துவதில் சவால் – சிறப்பு தொகுப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies