மகா கும்பமேளா : கழிவு மேலாண்மையில் அசத்தும் உ.பி. அரசு - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா கும்பமேளா : கழிவு மேலாண்மையில் அசத்தும் உ.பி. அரசு – சிறப்பு கட்டுரை!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 16, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜில் கூடியுள்ள நிலையில் கழிவு மேலாண்மைக்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்று வரும் கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பர் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும், ஆன்மாவை தூய்மைப்படுத்தும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் நாள்தோறும் பல லட்சம் பேர் பிரயாக்ராஜ் வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் கங்கை – யமுனை நதிக்கரையில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவில் மகா கும்ப நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக கோடிக்கணக்கானோர் வருகை தருவதால் கழிவு மேலாண்மையை கையாள்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதற்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பல்வேறு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது.

நாளொன்றுக்கு 16 மில்லியன் லிட்டர் மனிதக் கழிவையும், 240 மில்லியன் லிட்டர் கழிவு நீரையும் கையாள்வது சாதாரண செயல் அல்ல. அந்த பணிக்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் இணைந்து உருவாக்கிய HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR என்ற சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. இதை ஒரு அதிநவீன WASHING MACHINE என்று சொல்லலாம். ஆனால் துணிக்கு பதிலாக மனிதக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணியை HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR செய்கிறது.

அதே போல் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றுவதற்காக GEOTUBE TECHNOLOGY என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக BIOREMEDIATION என்னும் முறையும் பின்பற்றப்படுகிறது. பெரிய குளங்களில் கழிவுநீரை சேமித்து நுண்ணுயிர்கள் மூலம் அவற்றை தூய்மைப்படுத்துவதே BIOREMEDIATION.

கும்பமேளாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழாயிரம் கோடி ரூபாயில் கழிவு மேலாண்மைக்காக மட்டுமே ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக 316 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 45 ஆயிரம் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகளை காத்தல், சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் தடுத்தல் போன்ற பணிகளுக்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கழிவு மேலாண்மையில் மனிதர்களின் பங்களிப்பை வெகுவாக குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாபெரும் ஆன்மிக விழாக்களை தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி கையாள்வது என்பதற்கு உதாரணமாக மகாகும்பமேளா மாறியிருக்கிறது. கழிவு மேலாண்மையில் இந்திய தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு பலன் தரும் என்பதை உலகுக்கு மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன மகாகும்பமேளாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.

Tags: Maha Kumbh MelaTriveni Sangamwaste management systemBhabha Atomic Research Centre.ISROuttar pradeshPrayagraj
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் விழா – தெப்பக்காடு யானைகள் முகாமில் உற்சாக கொண்டாட்டம்!

Next Post

அமெரிக்காவில் காட்டு தீ : தீயணைப்பு பணியில் கடல் நீரை பயன்படுத்துவதில் சவால் – சிறப்பு தொகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies