முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை!
Aug 14, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை!

தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Jan 20, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், அணையில் மராமத்து பணியை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என வாதிடப்பட்டது.

மேலும், அணை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்த ஆய்வு செய்ய கேரள அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கேரள அரசு தரப்பில், அணை பாதுகாப்பு தொடர்பாக 5 ஆண்டுகளாக ஒருமுறை நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதே தங்களுக்கு சவாலாக உள்ளது எனவும் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், 142 அடியாக உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரம் என தெரிவித்தனர்.

அணை விவகாரத்தில் இருதரப்பும் தொடர்ந்து பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் கிடைக்காது எனக்கூறிய நீதிபதிகள், அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரிக்கலாம் என கூறினர்.

மேலும், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா அல்லது 2021 அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா என்பதை இருதரப்பும் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags: supreme courtMullaperiyar Damsupreme court of indiaCase investigation related to Mullaperiyar Dam
ShareTweetSendShare
Previous Post

மணிமுத்தாறு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை!

Next Post

நமது ஒற்றுமையே நாட்டின் பலம் : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies