தி.மு.க நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் : விஜய் !
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தி.மு.க நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் : விஜய் !

Murugesan M by Murugesan M
Jan 20, 2025, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்து போராட்டம் நடைபெறும் நிலையில், போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்தார்.

பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுமக்களை சந்திக்க பிரச்சார வாகனத்தில் தவெக கொடியை கையில் ஏந்தியபடி வருகை தந்த விஜய்க்கு அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், போராட்டத்தில் ஈடுபடும் பரந்தூர் மக்களுக்கு எப்போது துணை நிற்பேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாம் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை என்றும், விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமானநிலையத்தை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விமானநிலையத்திற்காக ஏரிகளை அழித்தால் சென்னை வெள்ளக்காடாகும் எனக்கூறிய விஜய், விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, தற்போது ஆளுங்கட்சியான பிறகு விவசாயிகளை எதிர்ப்பதாக விஜய் குற்றம்சாட்டினார்.

சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்த திமுக, பரந்தூர் விமான நிலையத்தை ஏன் எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பிய அவர், விமானநிலையத்தை தாண்டி அரசுக்கு இதில் ஏதோ ஒரு லாபம் உள்ளது என தெரிவித்தார்.

தவெக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்குவதற்கு கூட காவல்துறை அனுமதி வழங்குவதில்லை எனக்கூறிய விஜய், நாடகமாடுவதில் திமுகவினர் கில்லாடிகள் என விமர்சித்தார். ஆளுங்கட்சியின் நாடகத்தை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தவெக தலைவர் விஜய்க்கு, பரந்தூர் விவசாயிகள் பச்சை துண்டு அணிவித்து, நெல்மணிகளை பரிசாக வழங்கினர்.

Tags: parandur airportparandur vijay liveparandur airport vijaychennai new airport parandurparandur airport kanchipuram latest newsparandur liveparandur airport latest newsvijay parandurparandur airport issuechennai second airport parandurparandur airport newsparandur kanchipuram airportvijay parandur airportchennai new airportparandur vijay newsDMKparandur vijay speechnew airportvijay speech in parandurtn govtparandur new airport
ShareTweetSendShare
Previous Post

காணும் பொங்கல் அரசு விடுமுறை ரத்து? : தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள் போட்டி!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies