அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறை : திவாலாகும் தமிழகத்தின் நிதிநிலை - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறை : திவாலாகும் தமிழகத்தின் நிதிநிலை – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 24, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விரைவில் பத்து லட்சம் கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 2021 -2022 ஆம் ஆண்டில் 4.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் தொகை மார்ச் 2025க்குள் 8.33 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக தமிழக அரசு வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் கடன் அளவு விரைவிலேயே பத்து லட்சம் கோடியை தாண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் மூலம் ஈட்டப்படும் வருவாயை விட செலவினங்கள் அதிகரித்துவருவதே கடன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2010- 2011 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 727 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து 2014 -2015 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 407 கோடியாக உயர்ந்திருக்கிறது.

2016-2017 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை இருமடங்கு அதிகரித்து 11 ஆயிரத்து 985 கோடியாக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது.

2020-2021 ஆம் ஆண்டில் கொரனா பரவல் காரணமாக உலகப் பொருளாதாரமே பெரும் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையின் பன்மடங்கு அதிகரித்தது.

அதாவது இதுவரை அல்லாத அளவிற்கு 62 ஆயிரத்து 325 கோடி ரூபாயாக தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை உயர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கோவிட் தொற்று பரவல் குறையத் தொடங்கிய பின்னரும் தமிழக அரசின் வருவாய்ப்பற்றாக்குறையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை.

2021-2022 ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 538 கோடியாகவும், 2022-2023 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 215 கோடியாக குறைந்த வருவாய் பற்றாக்குறை, 2023-2024 ஆம் ஆண்டில் மீண்டும் 45 ஆயிரத்து 121 கோடியாகவும், 2024 – 2025 ஆம் ஆண்டில் 49 ஆயிரத்து 271 கோடியாகவும் அதிகரித்தது. வருவாய் பற்றாக்குறையை போக்கி கடன் சுமையை குறைப்போம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது கடன் சுமையை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் கடந்த ஆண்டு மொத்த பட்ஜெட் தொகை 4 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் அதில் 49 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் பற்றாக்குறை அதிகரிப்புக்கு தமிழக அரசு சார்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக மின்வாரியத்தின் கடனை செலுத்துவதற்காகவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை வழங்குவதற்காகவும், மானியம் வழங்குவதற்காகவும் அதிகளவிலான நிதி ஒதுக்கப்படுவது வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் ஆண்டுதோறும் எதிர்பாராத வகையில் ஏற்படும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கும் அதிகளவிலான நிதியை ஒதுக்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயமும் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட பொதுக் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 2025 ஆம் ஆண்டு 63 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 2025 -2026 ஆம் ஆண்டில் அது 70 ஆயிரம் கோடி ரூபாயும், 2026-2027 ஆம் ஆண்டில் 76 ஆயிரம் கோடியாகவும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசால் ஒதுக்கப்படும் மொத்த பட்ஜெட்டில் சுமார் 20 சதவிகிதம் நிதி வட்டி கட்டுவதற்காக மட்டுமே செலவிடப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஆனால், தமிழக அரசு வாங்கியிருக்கும் அனைத்து விதமான கடன்களும் மத்திய அரசின் 15வது நிதிக்குழு நிர்ணயிக்கும் அளவுக்குள்ளாகவே இருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதிநிலையை சீரமைக்க உலக அளவிலான பொருளாதார வல்லுநர்களை கொண்டு குழு அமைத்த நிலையில், தமிழக அரசின் வருவாயை பெருக்குவதற்கோ, பற்றாக்குறையை குறைப்பதற்கோ எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே கடந்த கால செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

Tags: Tamil Nadu government's debtncrease in expenditureCovid infectiontamil nadu governmentDMK governmentrevenue deficit
ShareTweetSendShare
Previous Post

பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்!

Next Post

சைஃப் அலிகானை தாக்கியவர் இந்தியாவுக்குள் நுழைந்தது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies