சைஃப் அலிகானை தாக்கியவர் இந்தியாவுக்குள் நுழைந்தது எப்படி? - சிறப்பு தொகுப்பு!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைஃப் அலிகானை தாக்கியவர் இந்தியாவுக்குள் நுழைந்தது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2025, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாம் ஷேசாத், இந்தியாவுக்குள் எப்படி வந்தார் ? என்பது பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வாரம், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அவரைக் கத்தியால் குத்தியதில், சைஃப் அலிகான் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சைஃப் அலிகான், அறுவை சிகிச்சை முடிந்த பின் வீடு திரும்பி இருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த 70 மணிநேரத்துக்குப் பின், தானே நகரில் பதுங்கி இருந்த முகமது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேசாத் என்ற நபரை கைது செய்தனர். இதனையடுத்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேசாத்தை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

விசாரணையில் கொல்கத்தாவில் வசிப்பதாக ஷேசாத் கூறியிருந்தாலும், ஷேசாத்தின் தொலைபேசியில் வங்க தேச எண்களுக்கும், வாட்ஸ் ஆப் மூலம் தமது குடும்ப உறுப்பினர்களுடன் பேசியிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் ஷேசாத் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவர் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு, ஷேசாத் தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

மேகாலயாவில் உள்ள இந்தியா-வங்கதேச எல்லை 443 கிலோமீட்டர் நீளமானது. இங்கே உள்ள டாவ்கி நதி இருநாடுகளுக்கும் இடையே ஒரு திறந்த எல்லையாக உள்ளது. டாவ்கி நதி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக பாதையாகவும் செயல்படுகிறது. சில காலமாகவே டாவ்கி நதி வழியாக வங்கத் தேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது அதிகமாகி வருகிறது. இந்த வழியாகத்தான், ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்குள் ஷேசாத் நுழைந்துள்ளான்.

வங்கதேசத்தின் ஜலோகாட்டி மாவட்டத்தின் நல்சிட்டி உபாசிலாவில் உள்ள ராஜபரியா கிராமத்தில் ஒரு சணல் வியாபாரியின் மகனான ஷேசாத், வங்கதேசத்தில் 2 ஆம் வகுப்பு வரை படித்ததாகவும், வேலை தேடி இந்தியா வந்ததாகவும் வங்கதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஏற்கெனவே வங்க தேசத்தில், ஷேசாத் மீது நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, ஷேசாத்தின் தந்தை ரூஹுல் அமீன் ஃபகிர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஷேசாத், மேற்கு வங்கத்தில் தங்கியிருந்ததாகவும் ஏஜன்ட் ஒருவரின் உதவியுடன் வேறு ஒருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சிம் கார்டைப் பெற்றதாகவும், பிறகு வேலை தேடி மும்பை வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குகுமோனி ஜஹாங்கீர் சேகா என்ற பெயரில் சேஷாத்தின் சிம்கார்டு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

குடியுரிமை ஆவணங்கள் தேவைப்படாத வேலைகளைத் தேடிய ஷேசாத், அமித் பாண்டே என்ற தொழிலாளர் ஒப்பந்ததாரரிடம் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். வொர்லி மற்றும் தானேயில் உள்ள ஹோட்டல்களில் அமித் பாண்டேவுக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளான் ஷேசாத்.

இந்நிலையில் சைஃப் அலிகான் வீட்டுக்கும், தப்பியோடிய பிறகு பதுங்கியிருந்த இடத்துக்கும் ஷேசாத்தை காவல் துறையினர் அழைத்து சென்று குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கி பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து ஷேசாத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: saif ali khan attacksaif ali khan attacked at homesaif ali khan casebangaladeshisaif ali khan injuredsaif ali khan robberyattack on saif ali khansaif ali khan knife attacksaif ali khan hospitalsaif ali khan attackerSaif Ali Khansaif ali khan attack newsSaif Ali Khan stabbedsaif ali khan latest newssaif ali khan newssaif ali khan discharged
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறை : திவாலாகும் தமிழகத்தின் நிதிநிலை – சிறப்பு தொகுப்பு!

Next Post

வேங்கை வயல் நீர்தேக்க தொட்டியில் மலம் கலக்கும் வீடியோ வெளியானது!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies