உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?
Jul 24, 2025, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?

Web Desk by Web Desk
Jan 25, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட தொடங்கி உள்ளதாகவும், அதனால், பூமியில் ஆறாவது பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் மிக மிக அரிதாக நடக்கும் இந்த சம்பவத்தால், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அறிவியல் ஆய்வுகளின் படி, நில அடுக்குகளின் நகர்வுகள் காரணமாக பூமியின் நிலப் பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெவ்வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் விளைவாகவே, உலகில் 7 கண்டங்கள் உருவாகின.

ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவது ரிப்ட் (Rift) எனப்படும். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவதாகும் . இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, மாறிவிடும்.

இரண்டு தட்டுகள் நகர பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கும் என்றாலும், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் Rift வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் அதிகம். தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, குறைந்தது 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கடந்த 25 ஆண்டுகளாக, நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிளவு பட்டு வருகிறது. 2005 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் சுமார் 56 கிலோ மீட்டர் அளவுக்கு விரிசல் தோன்றியது.

ஆண்டுக்கு ஒரு அங்குலம் என்ற அளவில், அந்த விரிசல் விரிவடைந்து வருவதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது பெருங்கடல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

டெக்டோனிக் தட்டுகள் ஒருவருக்கொருவர் விலகிச் செல்வதால், நிலப்பரப்பில் விரிசல் ஏற்படுவதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்கன் நியூபியன் (African Nubian), ஆப்பிரிக்கன் சோமாலி (African Somali), அரேபியன் (Arabian) ஆகிய மூன்று நில அடுக்குகள் ஏற்கெனவே நகரத் தொடங்கி விட்டன. இவை செயற்கைக்கோள்களால் மட்டுமின்றி, சாதாரண கண்ணுக்கு தெரியும் வகையில், விரிசல் அதிகமாகி உள்ளது.

தற்போதைய வேகத்தில் இந்த விரிசல் தொடருமா என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கும் விஞ்ஞானிகள், செங்கடல் போன்ற ஒரு பெருங் கடல் உருவாகலாம் என்று கணித்துள்ளனர். அடுத்த 50,000 ஆண்டுகளுக்கு இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை என்றும் அது கொஞ்சம் கொஞ்சமாகவே நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது நடக்க குறைந்தது இன்னும் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறும் விஞ்ஞானிகள், சோமாலியா மற்றும் எத்தியோப்பியா, கென்யா மற்றும் தான்சானியாவின் முக்கால்வாசி பகுதிகள் அடங்கிய ஒரு புதிய கண்டம் உருவாகும் என்றும் கூறியுள்ளனர். அது உலகின் 8வது கண்டமாகும்.

இந்த ஆப்பிரிக்காவில் நடக்கும் ரிப்ட் காரணமாக, ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் நிலப் பகுதியோடு மோதும்.

இதனால், அரபிக் கடலில் புதிய மலைகள் உருவாகும். அதன் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும். இந்த நில பரப்பில் மாற்றங்கள் ஏற்பட பல லட்சம் ஆண்டுகள் ஆகும்.

ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், மிகப்பெரிய சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் மாற்றங்கள் திடீர் என்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: africaEmerging 8th ContinentIndia
ShareTweetSendShare
Previous Post

முந்தும் முகேஷ் அம்பானி : உலகின் மிகப்பெரிய AI தரவு மையம்!

Next Post

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஆஸ்திரேலியாவில் இந்து கோயிலில் இனவெறி வாசகம் : மர்ம நபர்கள் அட்டூழியம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies