உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?
Jul 29, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?

Murugesan M by Murugesan M
Jan 25, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட தொடங்கி உள்ளதாகவும், அதனால், பூமியில் ஆறாவது பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் மிக மிக அரிதாக நடக்கும் இந்த சம்பவத்தால், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அறிவியல் ஆய்வுகளின் படி, நில அடுக்குகளின் நகர்வுகள் காரணமாக பூமியின் நிலப் பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெவ்வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் விளைவாகவே, உலகில் 7 கண்டங்கள் உருவாகின.

ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவது ரிப்ட் (Rift) எனப்படும். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவதாகும் . இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, மாறிவிடும்.

இரண்டு தட்டுகள் நகர பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கும் என்றாலும், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் Rift வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் அதிகம். தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, குறைந்தது 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கடந்த 25 ஆண்டுகளாக, நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிளவு பட்டு வருகிறது. 2005 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் சுமார் 56 கிலோ மீட்டர் அளவுக்கு விரிசல் தோன்றியது.

ஆண்டுக்கு ஒரு அங்குலம் என்ற அளவில், அந்த விரிசல் விரிவடைந்து வருவதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது பெருங்கடல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

டெக்டோனிக் தட்டுகள் ஒருவருக்கொருவர் விலகிச் செல்வதால், நிலப்பரப்பில் விரிசல் ஏற்படுவதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்கன் நியூபியன் (African Nubian), ஆப்பிரிக்கன் சோமாலி (African Somali), அரேபியன் (Arabian) ஆகிய மூன்று நில அடுக்குகள் ஏற்கெனவே நகரத் தொடங்கி விட்டன. இவை செயற்கைக்கோள்களால் மட்டுமின்றி, சாதாரண கண்ணுக்கு தெரியும் வகையில், விரிசல் அதிகமாகி உள்ளது.

தற்போதைய வேகத்தில் இந்த விரிசல் தொடருமா என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கும் விஞ்ஞானிகள், செங்கடல் போன்ற ஒரு பெருங் கடல் உருவாகலாம் என்று கணித்துள்ளனர். அடுத்த 50,000 ஆண்டுகளுக்கு இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை என்றும் அது கொஞ்சம் கொஞ்சமாகவே நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது நடக்க குறைந்தது இன்னும் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறும் விஞ்ஞானிகள், சோமாலியா மற்றும் எத்தியோப்பியா, கென்யா மற்றும் தான்சானியாவின் முக்கால்வாசி பகுதிகள் அடங்கிய ஒரு புதிய கண்டம் உருவாகும் என்றும் கூறியுள்ளனர். அது உலகின் 8வது கண்டமாகும்.

இந்த ஆப்பிரிக்காவில் நடக்கும் ரிப்ட் காரணமாக, ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் நிலப் பகுதியோடு மோதும்.

இதனால், அரபிக் கடலில் புதிய மலைகள் உருவாகும். அதன் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும். இந்த நில பரப்பில் மாற்றங்கள் ஏற்பட பல லட்சம் ஆண்டுகள் ஆகும்.

ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், மிகப்பெரிய சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் மாற்றங்கள் திடீர் என்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: IndiaafricaEmerging 8th Continent
ShareTweetSendShare
Previous Post

முந்தும் முகேஷ் அம்பானி : உலகின் மிகப்பெரிய AI தரவு மையம்!

Next Post

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies