உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?

Murugesan M by Murugesan M
Jan 25, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட தொடங்கி உள்ளதாகவும், அதனால், பூமியில் ஆறாவது பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் மிக மிக அரிதாக நடக்கும் இந்த சம்பவத்தால், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அறிவியல் ஆய்வுகளின் படி, நில அடுக்குகளின் நகர்வுகள் காரணமாக பூமியின் நிலப் பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெவ்வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் விளைவாகவே, உலகில் 7 கண்டங்கள் உருவாகின.

ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவது ரிப்ட் (Rift) எனப்படும். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவதாகும் . இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, மாறிவிடும்.

இரண்டு தட்டுகள் நகர பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கும் என்றாலும், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் Rift வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் அதிகம். தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, குறைந்தது 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கடந்த 25 ஆண்டுகளாக, நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிளவு பட்டு வருகிறது. 2005 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் சுமார் 56 கிலோ மீட்டர் அளவுக்கு விரிசல் தோன்றியது.

ஆண்டுக்கு ஒரு அங்குலம் என்ற அளவில், அந்த விரிசல் விரிவடைந்து வருவதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது பெருங்கடல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

டெக்டோனிக் தட்டுகள் ஒருவருக்கொருவர் விலகிச் செல்வதால், நிலப்பரப்பில் விரிசல் ஏற்படுவதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்கன் நியூபியன் (African Nubian), ஆப்பிரிக்கன் சோமாலி (African Somali), அரேபியன் (Arabian) ஆகிய மூன்று நில அடுக்குகள் ஏற்கெனவே நகரத் தொடங்கி விட்டன. இவை செயற்கைக்கோள்களால் மட்டுமின்றி, சாதாரண கண்ணுக்கு தெரியும் வகையில், விரிசல் அதிகமாகி உள்ளது.

தற்போதைய வேகத்தில் இந்த விரிசல் தொடருமா என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கும் விஞ்ஞானிகள், செங்கடல் போன்ற ஒரு பெருங் கடல் உருவாகலாம் என்று கணித்துள்ளனர். அடுத்த 50,000 ஆண்டுகளுக்கு இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை என்றும் அது கொஞ்சம் கொஞ்சமாகவே நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது நடக்க குறைந்தது இன்னும் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறும் விஞ்ஞானிகள், சோமாலியா மற்றும் எத்தியோப்பியா, கென்யா மற்றும் தான்சானியாவின் முக்கால்வாசி பகுதிகள் அடங்கிய ஒரு புதிய கண்டம் உருவாகும் என்றும் கூறியுள்ளனர். அது உலகின் 8வது கண்டமாகும்.

இந்த ஆப்பிரிக்காவில் நடக்கும் ரிப்ட் காரணமாக, ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் நிலப் பகுதியோடு மோதும்.

இதனால், அரபிக் கடலில் புதிய மலைகள் உருவாகும். அதன் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும். இந்த நில பரப்பில் மாற்றங்கள் ஏற்பட பல லட்சம் ஆண்டுகள் ஆகும்.

ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், மிகப்பெரிய சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் மாற்றங்கள் திடீர் என்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: IndiaafricaEmerging 8th Continent
Share
Tweet
SendShare
Previous Post

முந்தும் முகேஷ் அம்பானி : உலகின் மிகப்பெரிய AI தரவு மையம்!

Next Post

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies