வேங்கைவயல் : விலகாத மர்மம் வலுக்கும் சந்தேகம்!
Oct 22, 2025, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேங்கைவயல் : விலகாத மர்மம் வலுக்கும் சந்தேகம்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்களே சிபிஐ விசாரணை கோரியிருப்பது சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் இடதுபுறம் உள்ளடங்கியிருக்கிறது முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமம். பட்டியலின மக்கள் வசிக்கும் அக்கிராமத்தில்பயன்பாட்டில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

நூற்றுக்கும் அதிகமானவர்களிடம் விசாரணை, உண்மை கண்டறியும் சோதனை, 50க்கும் அதிகமானவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை என பல்வேறு கட்ட விசாரணை நடத்தியும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் உண்மையான குற்றவாளிகளை நெருங்க முடியாத சூழலே நிலவியது. இதற்கிடையில் அரசுக்கு நெருக்கடி அதிகரிக்க, ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஒருநபர் ஆணையமும் அமைத்து விசாரிக்கப்பட்ட நிலையிலும் குற்றவாளிகளை கண்டறிய முடியாததால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சண்முகத்தை பணிநீக்கம் செய்ததால், அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு, குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய்த் தகவலை பரப்பியதாகவும், அதன் பின்னர் குடிநீர் தொட்டி மீது ஏறி முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றச் செயல்களில் ஈடுப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி மீது மலப் பையுடன் சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் உள்ள வீடியோவும், செல்பி எடுப்பது போல புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதர்சன் அவரது தாய் மற்றும் உறவினருடன் பேசும் தொலைபேசி உரையாடலும் கசிந்திருக்கிறது.

இந்த வீடியோ மற்றும் தொலைபேசி உரையாடல் குறித்த உண்மைத் தன்மை இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத போட்டோவும் வீடியோவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் வெளியானது எப்படி ? மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களே எப்படி குற்றவாளிகளாக இருக்க முடியும்? உண்மைக் குற்றவாளிகளை பாதுகாக்க இதுபோன்று குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் வேறு வழியின்றி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எழுந்துள்ளன.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை உண்மைக் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இருப்பதாக கூறியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணையிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதே கருத்தையே திமுக கூட்டணியில் இருக்கும் மற்றொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசை வற்புறுத்தியுள்ளது.

வழக்கின் விசாரணை ஆரம்ப நிலையில் இருந்தே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை நோக்கியே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் விமர்சனம் செய்துவந்த நிலையில், தற்போது அந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மீதே குற்றமும் சுமத்தப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகங்களும் கேள்விகளுமே மட்டுமே நிரம்பிய வேங்கைவயல் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைப்பதே உண்மைக்குற்றவாளிகளை கண்டறிய ஒரே வழி என அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.

Tags: DMKtn govtvengaivayal issue
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் பிரியாணி கொண்டு செல்ல முயற்சி!

Next Post

தேசிய கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம்!

Related News

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies