டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட 'பீதி' : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!
Mar 15, 2026, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!

Murugesan M by Murugesan M
Jan 26, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பிறக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்பின் முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டி குவியும் இந்திய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் நிர்வாக ரீதியாக பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் 14-வது திருத்தத்தில் டிரம்ப் மாற்றங்கள் கொண்டு வந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்படி, பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்பதால், அதற்கு முன்பே குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் பலர் அங்குள்ள மருத்துவமனைகளை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

H1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய பெண்கள், அதிலும் குறிப்பாக மகப்பேறு காலத்தின் 8-வது மற்றும் 9-வது மாதத்தில் உள்ளவர்கள், தங்கள் அறுவை சிகிச்சைகளை பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன் நடத்துமாறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய், சேய் ஆகிய இருவருக்கும் வரப்போகும் ஆபத்தை உணராமல் இந்திய பெற்றோர்கள் பலர், மகப்பேறுக்கு முந்தைய கால அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவசரப்படுத்துவதாகவும் அமெரிக்க மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க குடியுரிமை நிராகரிப்பு குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சமே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அறுவை சிகிச்சை கோரிக்கைகளுடன் மருத்துவமனைகளை அணுகும் தம்பதிகளிடம் குறை பிரசவத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருவதாக கூறும் மருத்துவர்கள், ஒரு சிலர் தங்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ளும் மன நிலையில் கூட இருப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: usadonald trump 2025'Panic' caused by Trump's order: Indian pregnant women flock to hospitals for surgery!
ShareTweetSendShare
Previous Post

உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?

Next Post

76-வது குடியரசு தின விழா – தேசியக்கொடி ஏற்றினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies