டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட 'பீதி' : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!
Jun 6, 2025, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பிறக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்பின் முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டி குவியும் இந்திய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் நிர்வாக ரீதியாக பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் 14-வது திருத்தத்தில் டிரம்ப் மாற்றங்கள் கொண்டு வந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்படி, பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்பதால், அதற்கு முன்பே குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் பலர் அங்குள்ள மருத்துவமனைகளை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

H1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய பெண்கள், அதிலும் குறிப்பாக மகப்பேறு காலத்தின் 8-வது மற்றும் 9-வது மாதத்தில் உள்ளவர்கள், தங்கள் அறுவை சிகிச்சைகளை பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன் நடத்துமாறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய், சேய் ஆகிய இருவருக்கும் வரப்போகும் ஆபத்தை உணராமல் இந்திய பெற்றோர்கள் பலர், மகப்பேறுக்கு முந்தைய கால அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவசரப்படுத்துவதாகவும் அமெரிக்க மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க குடியுரிமை நிராகரிப்பு குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சமே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அறுவை சிகிச்சை கோரிக்கைகளுடன் மருத்துவமனைகளை அணுகும் தம்பதிகளிடம் குறை பிரசவத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருவதாக கூறும் மருத்துவர்கள், ஒரு சிலர் தங்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ளும் மன நிலையில் கூட இருப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: usadonald trump 2025'Panic' caused by Trump's order: Indian pregnant women flock to hospitals for surgery!
ShareTweetSendShare
Previous Post

உருவாகும் 8வது கண்டம் : உடையும் ஆப்பிரிக்கா என்ன ஆகும் இந்தியா?

Next Post

76-வது குடியரசு தின விழா – தேசியக்கொடி ஏற்றினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சீனாவில் நூற்றாண்டு பழமையான கட்டடங்கள் இடமாற்றம்!

ட்ரம்ப், ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு – வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் தலைமைக்கு சசி தரூர் கேள்வி!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் – ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை!

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்சுடன் ஒப்பந்தம்!

ஜம்மு – காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41-வது ஆண்டு நிறைவு – பொற்கோயில் அருகே பாதுகாப்பு அதிகரிப்பு!

கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு!

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயற்சி – கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் அபிஷேகம் செய்த விவகாரம் – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies