மனதை உருக்கும் ரணம் : இறந்த தாயின் உடலை சைக்கிளில் கட்டி சென்ற மகன் !
Jul 26, 2025, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனதை உருக்கும் ரணம் : இறந்த தாயின் உடலை சைக்கிளில் கட்டி சென்ற மகன் !

Web Desk by Web Desk
Jan 27, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் அரசு மருத்துவமனையில் இருந்து சைக்கிளில் கட்டி 15 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மீனவன் குளத்தைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள். கணவரை இழந்த இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மற்ற அனைவருக்கும் திருமணமாகி அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் வசித்து வரும் நிலையில், திருமணமாகாத இவரது கடைசி மகன் ஏசுபாலன், தாய் சிவகாமியம்மாளுடன் தங்கி அவரை கவனித்து வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் தலையில் பலத்த காயமடைந்த ஏசுபாலனுக்கு அவ்வப்போது மனநல பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏசுபாலன் வேலைக்கு ஏதும் செல்லாமல் தாயின் அரவணைப்பிலேயே இருந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் சிவகாமியம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஏசுபாலன் அவரை தனது சைக்கிளில் அமரவைத்து நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிவகாமியம்மாளை மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி ஏசுபாலன் அவரை சில தினங்களுக்கு முன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

ஜனவரி 23-ம் தேதி சிவகாமியம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய்க்கு அருகிலுள்ள டீக்கடையிலிருந்து ஏசுபாலன் டீ வாங்கிக்கொடுத்துள்ளார். அதை உட்கொண்டபோது எதிர்பாராத விதமாக சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில், தாயை ஊருக்கு எப்படி அழைத்துச் செல்வது என தெரியாமல் ஏசுபாலன் தவித்துள்ளார்.

உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் ஏசுபாலன் தனது சைக்கிளின் பின்னால் தாயை அமரவைத்து கட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து சைக்கிளை தள்ளியபடி நடந்தே 15 கி.மீ தொலைவுள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

நெல்லை – கன்னியாகுமரி நான்குவழிச்சாலை வழியாக மூன்றடைப்பு அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஏசுபாலனை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.

அவர் கூறிய தகவலின் பேரில் நெல்லை அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தை தொடர்புகொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வந்த சிவகாமியம்மாளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து வாகனம் மூலம் சிவகாமியம்மாளின் உடலை போலீசார் மீட்டு மீண்டும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகாமியம்மாளின் மற்ற உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சிவகாமியம்மாளின் உடல் அவரது மூத்த மகனான சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், உரிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு மருத்துவமனை நிர்வாகம் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற செயல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Nellai Government HospitalKalakkaduson carrying the body of his mother in cycleMeenavan KulamNanguneri government hospital.Nellai
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் குடியரசு தினம் – சிறப்பு கட்டுரை!

Next Post

உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies