மனதை உருக்கும் ரணம் : இறந்த தாயின் உடலை சைக்கிளில் கட்டி சென்ற மகன் !
Jan 14, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனதை உருக்கும் ரணம் : இறந்த தாயின் உடலை சைக்கிளில் கட்டி சென்ற மகன் !

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 27, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் அரசு மருத்துவமனையில் இருந்து சைக்கிளில் கட்டி 15 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மீனவன் குளத்தைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள். கணவரை இழந்த இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மற்ற அனைவருக்கும் திருமணமாகி அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் வசித்து வரும் நிலையில், திருமணமாகாத இவரது கடைசி மகன் ஏசுபாலன், தாய் சிவகாமியம்மாளுடன் தங்கி அவரை கவனித்து வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் தலையில் பலத்த காயமடைந்த ஏசுபாலனுக்கு அவ்வப்போது மனநல பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏசுபாலன் வேலைக்கு ஏதும் செல்லாமல் தாயின் அரவணைப்பிலேயே இருந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் சிவகாமியம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஏசுபாலன் அவரை தனது சைக்கிளில் அமரவைத்து நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிவகாமியம்மாளை மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி ஏசுபாலன் அவரை சில தினங்களுக்கு முன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

ஜனவரி 23-ம் தேதி சிவகாமியம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய்க்கு அருகிலுள்ள டீக்கடையிலிருந்து ஏசுபாலன் டீ வாங்கிக்கொடுத்துள்ளார். அதை உட்கொண்டபோது எதிர்பாராத விதமாக சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில், தாயை ஊருக்கு எப்படி அழைத்துச் செல்வது என தெரியாமல் ஏசுபாலன் தவித்துள்ளார்.

உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் ஏசுபாலன் தனது சைக்கிளின் பின்னால் தாயை அமரவைத்து கட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து சைக்கிளை தள்ளியபடி நடந்தே 15 கி.மீ தொலைவுள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

நெல்லை – கன்னியாகுமரி நான்குவழிச்சாலை வழியாக மூன்றடைப்பு அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஏசுபாலனை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.

அவர் கூறிய தகவலின் பேரில் நெல்லை அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தை தொடர்புகொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வந்த சிவகாமியம்மாளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து வாகனம் மூலம் சிவகாமியம்மாளின் உடலை போலீசார் மீட்டு மீண்டும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகாமியம்மாளின் மற்ற உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சிவகாமியம்மாளின் உடல் அவரது மூத்த மகனான சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், உரிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு மருத்துவமனை நிர்வாகம் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற செயல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Meenavan KulamNanguneri government hospital.NellaiNellai Government HospitalKalakkaduson carrying the body of his mother in cycle
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் குடியரசு தினம் – சிறப்பு கட்டுரை!

Next Post

உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies