மனதை உருக்கும் ரணம் : இறந்த தாயின் உடலை சைக்கிளில் கட்டி சென்ற மகன் !
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனதை உருக்கும் ரணம் : இறந்த தாயின் உடலை சைக்கிளில் கட்டி சென்ற மகன் !

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 27, 2025, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் அரசு மருத்துவமனையில் இருந்து சைக்கிளில் கட்டி 15 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மீனவன் குளத்தைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள். கணவரை இழந்த இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மற்ற அனைவருக்கும் திருமணமாகி அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் வசித்து வரும் நிலையில், திருமணமாகாத இவரது கடைசி மகன் ஏசுபாலன், தாய் சிவகாமியம்மாளுடன் தங்கி அவரை கவனித்து வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் தலையில் பலத்த காயமடைந்த ஏசுபாலனுக்கு அவ்வப்போது மனநல பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏசுபாலன் வேலைக்கு ஏதும் செல்லாமல் தாயின் அரவணைப்பிலேயே இருந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் சிவகாமியம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஏசுபாலன் அவரை தனது சைக்கிளில் அமரவைத்து நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிவகாமியம்மாளை மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி ஏசுபாலன் அவரை சில தினங்களுக்கு முன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

ஜனவரி 23-ம் தேதி சிவகாமியம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய்க்கு அருகிலுள்ள டீக்கடையிலிருந்து ஏசுபாலன் டீ வாங்கிக்கொடுத்துள்ளார். அதை உட்கொண்டபோது எதிர்பாராத விதமாக சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில், தாயை ஊருக்கு எப்படி அழைத்துச் செல்வது என தெரியாமல் ஏசுபாலன் தவித்துள்ளார்.

உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் ஏசுபாலன் தனது சைக்கிளின் பின்னால் தாயை அமரவைத்து கட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து சைக்கிளை தள்ளியபடி நடந்தே 15 கி.மீ தொலைவுள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

நெல்லை – கன்னியாகுமரி நான்குவழிச்சாலை வழியாக மூன்றடைப்பு அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஏசுபாலனை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.

அவர் கூறிய தகவலின் பேரில் நெல்லை அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தை தொடர்புகொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வந்த சிவகாமியம்மாளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து வாகனம் மூலம் சிவகாமியம்மாளின் உடலை போலீசார் மீட்டு மீண்டும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகாமியம்மாளின் மற்ற உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சிவகாமியம்மாளின் உடல் அவரது மூத்த மகனான சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், உரிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு மருத்துவமனை நிர்வாகம் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற செயல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Meenavan KulamNanguneri government hospital.NellaiNellai Government HospitalKalakkaduson carrying the body of his mother in cycle
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் குடியரசு தினம் – சிறப்பு கட்டுரை!

Next Post

உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies