சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம்
Sep 30, 2025, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jan 30, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கடும் மாசை ஏற்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடக்கோரி, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற “Reversis Osmosis” தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளன எனக்கூறி தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணைகள் முடிவடைந்து, நீதிபதிகள், ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து வேலூர் பாலாற்று பகுதிகளில் மாசு தொடர்பாக கண்காணிக்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், விதிகளை மீறி செயல்படும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி தோல் தொழிற்சாலைகளிடமிருந்து இழப்பீடு தொகையைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்

மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளடங்கிய குழு அமைத்து தோல் தொழிற்சாலை கழிவுகளை பாலாற்றில் கலப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் சுற்றுச்சூழல் மாசையும், பாலாறு மாசடைவதையும் தடுக்க உரிய பரிந்துரைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் விதிகளை அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும், விதிகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Vellore Environment Monitoring GroupReversis Osmosissupreme courtvelloretanneries ownerspolluting the environment
ShareTweetSendShare
Previous Post

காணும் பொங்கல் தினத்தில் குப்பை போடும் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Next Post

காந்தி விழா தொடர்பாக முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies