சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம்
Aug 7, 2025, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jan 30, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கடும் மாசை ஏற்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடக்கோரி, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற “Reversis Osmosis” தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளன எனக்கூறி தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணைகள் முடிவடைந்து, நீதிபதிகள், ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து வேலூர் பாலாற்று பகுதிகளில் மாசு தொடர்பாக கண்காணிக்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், விதிகளை மீறி செயல்படும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி தோல் தொழிற்சாலைகளிடமிருந்து இழப்பீடு தொகையைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்

மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளடங்கிய குழு அமைத்து தோல் தொழிற்சாலை கழிவுகளை பாலாற்றில் கலப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் சுற்றுச்சூழல் மாசையும், பாலாறு மாசடைவதையும் தடுக்க உரிய பரிந்துரைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் விதிகளை அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும், விதிகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: supreme courtvelloretanneries ownerspolluting the environmentVellore Environment Monitoring GroupReversis Osmosis
ShareTweetSendShare
Previous Post

காணும் பொங்கல் தினத்தில் குப்பை போடும் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Next Post

காந்தி விழா தொடர்பாக முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies