சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 31, 2025, 06:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடந்த 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட பின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை எனக்கூறி அவரது மனைவி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறை முறையாக தடயங்களை சேகரிக்க தவறியதால் ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்வது கூடுதல் ஆவணமாக அமையும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.

இதனிடையேபுதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். துளையானூரில் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் லலிதாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கனிமவளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags: PudukkottaiMadurai branch of the High Courtpermission to exhume the body of Jagbar AliJagbar Ali murder case
ShareTweetSendShare
Previous Post

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

Next Post

இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் – கொளத்தூர் மணியை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies