சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!
Sep 13, 2026, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 31, 2025, 06:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடந்த 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட பின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை எனக்கூறி அவரது மனைவி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறை முறையாக தடயங்களை சேகரிக்க தவறியதால் ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்வது கூடுதல் ஆவணமாக அமையும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.

இதனிடையேபுதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். துளையானூரில் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் லலிதாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கனிமவளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags: PudukkottaiMadurai branch of the High Courtpermission to exhume the body of Jagbar AliJagbar Ali murder case
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

Next Post

இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் – கொளத்தூர் மணியை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies