2வது நாளாக வீட்டு காவலில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்!
Jul 4, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2வது நாளாக வீட்டு காவலில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை ரயில் நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலில் இருந்து இறங்கிய 20க்கு மேற்பட்ட இந்து அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய முற்பட்ட போது வாகனத்தில் ஏற மறுத்து இந்து முன்னணியினர் காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

பழனியில் இருந்து பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமையில், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், நகர தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில், பழனியில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவடிகளை எடுத்தபடி திருப்பரங்குன்றம் நோக்கி பாதயாத்திரையை துவங்கினர். அப்போது பாதயாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருப்பரங்குன்றம் செல்வதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை, இரண்டாவது நாளாக போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 16 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சேலம் மாநகர மாவட்ட பாஜக துணைத் தலைவி சுமதி இரண்டாவது நாளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர் மாவட்டத்தில் மட்டும் 102 பேரை வீட்டுக்காவல் மற்றும் பணியாற்றிய இடங்களில் போலீசார் காவலில் வைத்துள்ளனர். மேலும், திருப்பரங்குன்றம் செல்ல வாகனங்களில் புறப்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருப்பரங்குன்றத்தில் சுவாமி சன்னதிக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்த இந்து முன்னணியை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

Tags: tn bjpBJP and Hindu Front executives under house arrest for 2nd day!
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : ஜல்லிக்கட்டு போட்டி: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு!

Next Post

ஜப்பான்: ஹொக்கைடோ மாகாணத்தில் வரலாறு காணாத பனி!

Related News

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

அதிமுக உட்கட்சி விவகாரம் : காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies