2வது நாளாக வீட்டு காவலில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்!
Jul 29, 2026, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2வது நாளாக வீட்டு காவலில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை ரயில் நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலில் இருந்து இறங்கிய 20க்கு மேற்பட்ட இந்து அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய முற்பட்ட போது வாகனத்தில் ஏற மறுத்து இந்து முன்னணியினர் காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

பழனியில் இருந்து பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமையில், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், நகர தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில், பழனியில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவடிகளை எடுத்தபடி திருப்பரங்குன்றம் நோக்கி பாதயாத்திரையை துவங்கினர். அப்போது பாதயாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருப்பரங்குன்றம் செல்வதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை, இரண்டாவது நாளாக போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 16 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சேலம் மாநகர மாவட்ட பாஜக துணைத் தலைவி சுமதி இரண்டாவது நாளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர் மாவட்டத்தில் மட்டும் 102 பேரை வீட்டுக்காவல் மற்றும் பணியாற்றிய இடங்களில் போலீசார் காவலில் வைத்துள்ளனர். மேலும், திருப்பரங்குன்றம் செல்ல வாகனங்களில் புறப்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருப்பரங்குன்றத்தில் சுவாமி சன்னதிக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்த இந்து முன்னணியை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

Tags: tn bjpBJP and Hindu Front executives under house arrest for 2nd day!
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : ஜல்லிக்கட்டு போட்டி: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு!

Next Post

ஜப்பான்: ஹொக்கைடோ மாகாணத்தில் வரலாறு காணாத பனி!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies