2வது நாளாக வீட்டு காவலில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்!
Jun 14, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2வது நாளாக வீட்டு காவலில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை ரயில் நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலில் இருந்து இறங்கிய 20க்கு மேற்பட்ட இந்து அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய முற்பட்ட போது வாகனத்தில் ஏற மறுத்து இந்து முன்னணியினர் காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

பழனியில் இருந்து பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமையில், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், நகர தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில், பழனியில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவடிகளை எடுத்தபடி திருப்பரங்குன்றம் நோக்கி பாதயாத்திரையை துவங்கினர். அப்போது பாதயாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருப்பரங்குன்றம் செல்வதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை, இரண்டாவது நாளாக போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 16 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சேலம் மாநகர மாவட்ட பாஜக துணைத் தலைவி சுமதி இரண்டாவது நாளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர் மாவட்டத்தில் மட்டும் 102 பேரை வீட்டுக்காவல் மற்றும் பணியாற்றிய இடங்களில் போலீசார் காவலில் வைத்துள்ளனர். மேலும், திருப்பரங்குன்றம் செல்ல வாகனங்களில் புறப்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருப்பரங்குன்றத்தில் சுவாமி சன்னதிக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்த இந்து முன்னணியை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

Tags: tn bjpBJP and Hindu Front executives under house arrest for 2nd day!
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : ஜல்லிக்கட்டு போட்டி: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு!

Next Post

ஜப்பான்: ஹொக்கைடோ மாகாணத்தில் வரலாறு காணாத பனி!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies