போதைப்பொருள் கும்பல் சுதந்திரமாக நடமாட மெத்தனமாகிவிட்டதா தமிழக அரசு என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ரிக்ஷாவில் 18 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை ஒரு பயங்கரமான யதார்த்தமாக மாறிவிட்டது என்றும், போதைப்பொருள் எளிதில் அணுகக்கூடிய பொருளாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் NDPS வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் (ஒரு வருடத்தில்), NDPS வழக்குகளில் மொத்த கைதுகளின் எண்ணிக்கை 9632 என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் விற்பனை அதிகரித்து வருவதாகவும், ஆனால் கைதுகள் குறைந்து வருகின்றன. எப்படி என்றம் அவர் வினவியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக நடமாட தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.