இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளது : ராஜ்நாத் சிங்
Jan 14, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளது : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Feb 10, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் 15வது விமானப்படை கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியாவின் வான்வழி வலிமையையும், உள்நாட்டு அதிநவீன கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தப்படுகின்றன. 50 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 900க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏரோ இந்தியா கண்காட்சியில், விமானப்படையின் விமானங்கள் வான்வெளி சாகசங்களில் ஈடுபட்டன. வானில் பறந்தபடி சாகசங்களில் ஈடுபட்ட சூரிய கிரண் ஏரோபாட்டிக் குழு மற்றும் தேஜஸ் போர் விமானங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெறும் நிலையில், மற்றொரு கும்பமேளா விழாவாக ஏரோ இந்தியா கண்காட்சி தொடங்கியுள்ளதாக கூறினார்.

பிரயாக்ராஜின் மகா கும்பமேளா இந்தியாவின் கலாச்சாரத்தையும், பெங்களூரு ஏரோ மகா கும்பமேளா இந்தியாவின் வலிமையையும் காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளை மேம்படுத்த நமது விமானப்படை பெரும் பங்கு வகிக்கிறது எனக்கூறிய அவர், பலவீனமான சூழலில் அமைதியை ஒருபோதும் அடைய முடியாது என குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் காணப்படும் நிலையில், அமைதியையும் செழிப்பையும் காணக்கூடிய ஒரு பெரிய நாடு இந்தியா திகழ்கிறது என தெரிவித்தார்.

Tags: Indian Air Forcecentral minister rajnath singhair showIndia's Another Kumbh Mela Festival Begins With Air Show: Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Next Post

மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies