உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் அதிமுக!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் அதிமுக!

Murugesan M by Murugesan M
Feb 11, 2025, 08:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை தொடர்ந்து மூத்த தலைவர் செங்கோட்டையனும் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி பிரச்னைகளை சமாளிக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, அடுத்த வரும் சட்டமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அதிமுகவின் கிளை தொடங்கி மாவட்டம் வரையிலான அனைத்து நிலையிலான பிரிவுகளையும் வலுப்படுத்தும் வகையிலும், உட்கட்சியில் நிலவும் பிரச்னைகளை களையும் வகையிலும் அமைக்கப்பட்ட கள ஆய்வுக்கூட்டம் தமிழகம் முழுவதும் தங்களின் கள ஆய்வை நடத்தி தங்களின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கள ஆய்வு கலவரமாக மாறிய நிலையில், சென்னையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் எந்தவிதமான சலசலப்புகளும் நிகழக்கூடாது என அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, சென்னையில் நடைபெற்ற கள ஆய்வுக்கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அதனை தீர்ப்பதற்கான வழிகளை சொல்ல வேண்டிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தன்னோட பிரச்னைகளை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.  தனக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை, தன்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதில்லை என ஆதங்கப்பட்ட கோகுல இந்திரா, தன் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தினால் பதவி பறிபோய்விடும் என சிலர் அஞ்சுவதாகவும் பேசியது நிர்வாகிகள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது ஒருபுறம் இருக்க, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றித் தந்ததாக கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தொடங்குவதற்கு அடித்தளமிட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்க கூடாது என முடிவு செய்த செங்கோட்டையன் அந்த நிகழ்வை புறக்கணித்திருக்கிறார்.

ஏற்கனவே  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என அதிமுக நான்காக பிரிந்திருக்கும் நிலையில், மூத்த நிர்வாகிகளான கோகுல இந்திரா மற்றும் செங்கோட்டையனின்   தலைமைக்கு எதிரான பேச்சு அதிமுகவில் ஏற்கனவே தலைவிரித்தாடும் உட்கட்சி பூசலை மேலும் வலுவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடைபெற்று முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையின் படி செயல்படாத நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டு புதியவர்களுக்கு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாத இறுதியில் இருந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் மூத்த தலைவர்கள் செயல்படும் விதம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சிக்குள்ளாக நடைபெறும் உட்கட்சி பூசலையே சரிகட்ட முடியாத எடப்பாடி பழனிசாமி, மக்களை சரிகட்டி தேர்தலில் எப்படி வெல்வார் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளோடு, அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும் திமுக அரசு மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, தன் கட்சிக்குள்ளாக நடைபெறும் உட்கட்சி பிரச்னை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.

தேர்தலுக்கு ஒரு வருடம் மட்டுமே கால அவகாசம் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி  உட்கட்சி பிரச்னைகளை உடனடியாக சீர்செய்தால் மட்டுமே மக்கள் பிரச்னைகளில் முழு கவனத்தை செலுத்த முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags: SENGOTTAIYAN ADMKedappadi palanisamy admkeps admkepsaiadmktn politicsAIADMK stuck in internal conflict!
ShareTweetSendShare
Previous Post

பள்ளி மாணவர்களின் கல்வியில் நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

மாறப்போகும் சந்தை : AI உச்சிமாநாட்டில் மோடி – இந்தியாவின் வியூகம் என்ன?

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies